என்ன ஒரு மரியாதை! அமைச்சர் சேகர்பாபுவை கண்டதும் எழுந்து நின்ற சென்னை மேயர்! அரசு விழாவில் ருசிகரம்!
சென்னை: சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர் சேகர் பாபு மேடையேறி வருவதை கண்ட மேயர் பிரியா ராஜன் சட்டென எழுந்து நின்று கொண்டார்.
இதனிடையே மேடையில் முதல்வர் இருப்பதால் சுதாரித்துக்கொண்ட மேயர் ப்ரியா ராஜன், அமைச்சர் சேகர்பாபு அமர்வதற்கு முன்பே தனது இருக்கையில் அமர்ந்துகொண்டார்.
மேயர்களை பற்றி முதல்வர் ஸ்டாலின் எப்போது பேசினாலும் 'வணக்கத்திற்குரிய மேயர் அவர்களே' என அந்தப் பதவிக்குரிய மரியாதையை முழுமையாக வழங்குவார்.

அரசு விழா
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மனநலம் மற்றும் உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு தொடக்க விழாவானது சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்ரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் ப்ரியா ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழா மேடையில் முதல்வர் ஸ்டாலின் அம்ர்ந்திருக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வரவேற்று பேசிக்கொண்டிருந்தார்.

சென்னை மேயர்
அப்போது மேடைக்கு வந்த அமைச்சர் சேகர்பாபுவை பார்த்ததும் சென்னை மேயர் ப்ரியா ராஜன் சட்டென எழுந்து நின்று கொண்டார். மேடையில் முதல்வர் இருப்பதால் இது போல் செய்யக்கூடாது என்பதை உணர்ந்து சுதாரித்துக் கொண்ட அவர், அமைச்சர் சேகர்பாபு அமர்வதற்கு முன்பே தனது இருக்கையில் அமர்ந்துகொண்டார். அமைச்சர் சேகர்பாபு மீதான தனது விசுவாசத்தையும், மரியாதையையும் அரசு விழாவில் வெளிப்படுத்தும் விதமாக நடந்துள்ளார் மேயர் ப்ரியா ராஜன்.

கட்சி நிகழ்ச்சிகள்
பொதுவாக கட்சி நிகழ்ச்சிகளில் தான் இது போன்ற நிகழ்வுகளை பார்க்க முடியும். அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் மேயராக இருப்பவர்கள் தங்களது பதவிக்குரிய கம்பீரத்துடன் அமர்ந்திருப்பது தான் வழக்கம். மேயர்களை பற்றி முதல்வர் ஸ்டாலின் எப்போது எந்த நிகழ்ச்சியில் பேசினாலும் 'வணக்கத்திற்குரிய மேயர் அவர்களே' எனக் குறிப்பிடுவதுடன் அந்தப் பதவிக்குரிய மரியாதையை முழுமையாக வழங்குவார். ஏனெனில் அவரும் மேயராக இருந்த காரணத்தால் அந்தப் பதவிக்குரிய அதிகாரமும், கம்பீரமும் அவருக்கு தெரியும்.
Recommended Video

துணை மேயர்
விழா மேடையில் முதல்வருடன் மூன்று அமைச்சர்கள், மேயர், தலைமைச் செயலாளர் ஆகியோர் மட்டுமே அமர்ந்திருந்தனர். துணை மேயர் மகேஷ் உட்பட இன்னும் பல முக்கியப் பிரமுகர்கள் மேடைக்கு கீழே தான் அமர்ந்திருந்தனர். அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் விரைவாக அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications