“யாரும் பயப்பட வேண்டாம்.. எவ்வளவு மழை வந்தாலும் எதிர்கொள்ள ரெடி” - சென்னை மேயர் பிரியா உறுதி
சென்னை: சென்னையில் கடந்த 2 நாட்களில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதைவிட அதிக மழை வந்தாலும் அதனை சமாளிக்கத் தயாராக இருப்பதாக மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். பாதிப்பு இருந்தால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்படுவார்கள் என்றும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை உட்பட வட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், மழை பெய்யக்கூடும். மேலும், தமிழ்நாட்டில் 27 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை ராயபுரம் மண்டல அலுவலகத்தில், அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இதில், வட்டார துணை கண்காணிப்பாளர் கட்டா தேஜா ரவி, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், ராயபுரம் மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு என மாநகராட்சியின் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மேயர் பிரியா, "ராயபுரம் மண்டலத்தில் மழை முன்னெச்சரிக்கையாக 9 மீட்பு முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள 5 சுரங்க பாதைகளும் மொத்தமாக சீரமைக்கப்பட்டு, சென்சார் மற்றும் கேமரா மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவையான இடங்களில் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில், தற்போது 3 சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தேவைப்பட்டால் போர்க்கால அடிப்படையில் மேலும் சமையல் கூடங்கள் உருவாக்கப்படும்.
சென்னையில் கடந்த 2 நாட்களில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதைவிட அதிக மழை பெய்தாலும் அதனை சமாளிக்க சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது. இதுவரை பெய்த மழையால் பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால், மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்படவில்லை. துணை முதலமைச்சர் உத்தரவுப்படி, சென்னை மாநகராட்சி சார்பில் 1.50 லட்சம் பேருக்கு காலை உணவும், 2.30 லட்சம் பேருக்கு மதிய உணவும் வழங்கப்பட்டுள்ளது.
வரும் 25 ஆம் தேதி கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையை பொறுத்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ராயபுரம் மண்டலத்தில் மார்க்கெட் பகுதிகளில் சேரும் குப்பைகளை அகற்றுவதற்காக 10 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆறு மற்றும் புழல் ஏரியிலிருந்து வரும் உபரி நீர் கால்வாய்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பாதிப்பு இருந்தால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications