சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவர் திடீரென மயங்கி விழுந்து பலி.. பயங்கர ஷாக்! காரணம்? ஒரே மர்மம்!
சென்னை : சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் தனுஷ் (24) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது மாணவர்கள், பேராசிரியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவரின் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் தனுஷ் (24). இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கி எம்.பி.பி.எஸ் இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தனுஷ் ஸ்டான்லி குழந்தைகள் நல மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார்.

இதனைப் பார்த்த சக மாணவர்கள் தனுஷை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தனுஷ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு சென்ற ஏழுகிணறு காவல் நிலைய போலீசார் மாணவன் தனுஷ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மருத்துவக் கல்லூரி மாணவர் தனுஷின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவரது உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications