நாளை மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் ஜில் ஜில் தகவல்! முழு விவரம் இதோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை லேசான முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது;

இன்று மழை

இன்று மழை

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தமிழக வட கடலோர மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

நாளை மழை

நாளை மழை

நாளை (அதாவது 30.01.2022) தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். இதேபோல் 31, 1, 2, -ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்

வானம் மேகமூட்டம்

வானம் மேகமூட்டம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். இதனிடையே மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல இடங்கள்

பல இடங்கள்

கடந்த இரண்டு நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்து வருவது கவனிக்கத்தக்கது. திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் லேசான அளவில் சாரல் மழையும் பெய்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+