இந்தி திணிப்பு சர்ச்சைக்கு இடையே.. சென்னை வானிலை மைய அறிவிப்பில் வந்த மாற்றம்! என்ன நடந்தது?
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் வெளியிடப்பட்ட அறிக்கையில் தற்போது இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க விடமாட்டோம் என்று தமிழக அரசு கூறி வரும் நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் வானிலை அறிக்கையை மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது. தமிழகம், புதுவை, காரைக்கால் வானிலை நிலவரங்களை தினமும் அப்டேட் செய்து வருகிறது. அது போக மழை இருப்பின், 3 மணி நேரத்திற்கு ஒரு முறையும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இதற்கான சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கம் உள்ளது. இந்த இணைய பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளின் அன்றைய தினத்திற்கான வானிலை முன்னறிவிப்பினை பார்த்து தெரிந்துகொள்ள முடியும். இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது இதில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது.
அதாவது ஆங்கிலம், தமிழ் மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையினை படிக்க முடியும். தமிழகத்தில் இந்தி மொழி திணிப்பு எதிராக தமிழக அரசு பேசி வரும் நிலையில் வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் இந்தி மொழி சேர்க்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications