வாவ்.. நினைத்ததுபோலவே நடந்துவிட்டது.. அப்போ தமிழகத்துக்கு நல்ல மழை கன்பார்ம்!
Recommended Video
சென்னை: அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது என சென்னை வானிலை மையம் தெரிவித்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 1-ஆம் தேதி முதல் பெய்து வருகிறது. இந்நிலையில் குமரிக் கடலில் பெய்யும் மழையால் தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வந்தது.
விஜய்க்கு இதே வேலையாக போய்விட்டது.. பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
தமிழகம் நோக்கி
இது கடந்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த தாழ்வு மண்டலம் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி நகர்கிறது.
வானம் மேகமூட்டத்துடன்
இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
அறிவுரை
நவம்பர் 14-ஆம் தேதி தமிழகத்தில் வடமாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் செல்ல வேண்டாம்
10-ஆம் தேதி அந்தமான், தென்கிழக்கு கடல் பகுதிக்கும், 11-ஆம் தேதி வங்கக்கடல், வட அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், 12-ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு, மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும், 13-ஆம் தேதி மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.