தமிழகத்தில் வரும் ஏப்.2 வரை அனல் கக்கும்.. வெளியே போனா குடையுடன் போங்கப்பு!
சென்னை: தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மன்னார் வளைகுடா, உள்தமிழக பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, வானிலை எப்படி இருக்கும் என்பதை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
31.03.2022: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை
அதிகபட்ச வெப்பநிலை: 31.03.2022 முதல் 02.04.2022 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை
அதிகபட்ச வெப்பநிலை: 31.03.2022 முதல் 02.04.2022 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை
சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

எங்கு மழை
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): கொடநாடு (நீலகிரி) 5, கிண்ணக்கோரை (நீலகிரி) 4, தாளவாடி (ஈரோடு), கெட்டி (நீலகிரி), சோலையாறு (கோவை) தலா 2, போடிநாயக்கனூர் (தேனி) 1. மீனவர்களுக்கான எச்சரிக்கை : ஏதுமில்லை.












Click it and Unblock the Notifications