தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்- சென்னை வானிலை மையம் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பலத்த மழை - சென்னை வானிலை வார்னிங் - வீடியோ

    சென்னை: குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நாளை மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்து தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. இதனால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் சென்னையில் கனமழை பெய்தது. சிறிது நேரம் கழித்து வெயில் வந்தது.

    Chennai Meteorological department says that 16 districts will get heavy to moderate rainfall

    இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், தென்மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா குமரிக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தமிழகத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    வடதமிழகத்தில் திருவண்ணாமலை, காஞ்சி, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். தென்தமிழகத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை பெய்யும்.

    தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும். சென்னையில் மிதமான மழை பெய்யக் கூடும். தமிழகத்தில் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மழை பெய்யக் கூடும்.

    எனவே அக்டோபர் 29, 30, 31 ஆகிய நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+