சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை, காஞ்சி உள்பட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. நல்ல செய்தி சொன்ன சென்னை வானிலை மையம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை, காஞ்சிபுரம் உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடைக் காலம் தொடங்கியவுடன் எப்போது மழை பெய்யும் என மக்கள் ஏங்கியுள்ளனர். இந்த நிலையில் ஆங்காங்கே வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அரபிக் கடலில் நிசார்கா புயல் நாளை உருவாகிறது.

இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 வர்லாம் வா.. படையெடுக்கும் வர்லாம் வா.. படையெடுக்கும் "ரெட்" தக்காளிகள்.. சென்னை உள்பட 4 மாவட்டங்களில் செம மழை பெய்யுமாம்!

எங்கு மழை

எங்கு மழை

இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.

மீனவர்கள்

மீனவர்கள்

தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மேலும் வலுபெற்று புயலாக மாறும். புயலால் கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும். வரும் 4-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.

சூறைக் காற்று

சூறைக் காற்று

அரபி கடலில் அவ்வப்போது மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும் புயல் காற்று வீசும். எனவே ஜூன் 4 ஆம் தேதி வரை லட்சத்தீவு, கேரள கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று காலை முதல் வெயில் விட்டு விட்டு வீசி வருகிறது.

Recommended Video

    தமிழகத்தில் தொடங்கிய போக்குவரத்து..தகவல்கள்
    மழை

    மழை

    சென்னையின் வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. அது போல் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மேகம் மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் மக்கள் மழையை வரவேற்க காத்து கொண்டிருக்கிறார்கள். தென்மேற்கு பருவமழை இன்று முதல் தொடங்கியது.

    English summary
    Chennai Meteorological department says that 17 districts will get rain next 24 hours. Fishermen are advised not to go for fishing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X