பைக் சீட்டுகள் நனையும் அளவுக்கு இன்றும் மழை பெய்யும்.. வாட்டர் வாஷ் ரேஞ்சுக்கு எதிர்பார்க்காதீங்க
Recommended Video
சென்னை: வெப்பச்சலனம், தென்மேற்கு பருவக் காற்று காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்து போய்விட்டது. இதனால் நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு விட்டன. தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. நாள்தோறும் மக்கள் தண்ணீருக்காக அலைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மழை பெய்தால் மட்டுமே பிரச்சினையை ஓரளவு சமாளிக்கலாம் என்ற நிலை எழுந்தது.

நிபுணர்கள்
இதையடுத்து கடந்த வியாழக்கிழமை 196 நாட்களுக்கு பிறகு, அதாவது 6 மாதங்களுக்கு பிறகு, சென்னையில் மழை பெய்தது. அப்போது வெப்பச்சலனம் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்ததாக வானிலை நிபுணர்கள் தெரிவித்தனர்.

காஞ்சிபுரத்தில் மழை
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை சென்னையில் மழை இல்லை. நேற்றைய தினம் சென்னையில் பிசுபிசுவென தூரல் போட்டது. ஏதோ தரையெல்லாம் நனையும் அளவுக்கு மழை பெய்தது. எனினும் காஞ்சிபுரத்தில் கனமழை பெய்தது.

பகுதிகள்
இந்த நிலையில் நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாக நடுவட்டம், தேவாலா ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. அளவுக்கு மழை பெய்தது. அது போல் வால்பாறை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பெய்தது.

இடியுடன் கூடிய மழை
இதுகுறித்து சென்னை வானிலை மையம் செய்தியாளர்களிடம் கூறுகையில் வெப்பசலனம், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வானம் மேக மூட்டம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,விழுப்புரம், கடலூர் ஆகிய இடங்களில் லேசான மழை உண்டு. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications