ஒரு பக்கம் வெயில்! மறுபக்கம் மழை.. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கும்! எங்கு தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனிடையே வரும் நாட்களிலும் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த பிப். மாதம் வெப்பம் உச்சத்தில் இருந்த நிலையில், அதன் பிறகு வெப்பம் கணிசமாகக் குறைந்தது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வெப்பம் குறைவாகவே இருந்தது.

இதன் காரணமாக மாநிலத்தில் பல இடங்களில் வெப்பம் கணிசமாகக் குறைந்துள்ளது. இதனிடையே வரும் நாட்களில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.

 இன்றும் நாளையும் மழை

இன்றும் நாளையும் மழை

தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் (மார்ச் 27) நாளையும் (மார்ச் 28) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 வரும் நாட்கள்

வரும் நாட்கள்

அதேபோல நாளை மறுநாள் (மார்ச் 29) முதல் மார்ச் 31ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை

சென்னை

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

 மீனவர்களுக்கு எச்சரிக்கை

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மன்னார்குடி (திருவாரூர்) 8, அழகரை எஸ்டேட் (நீலகிரி) 7, கோத்தகிரி எஸ்டேட், கொடநாடு தேன்கனிக்கோட்டை, குன்னூர் PTO தலா 5 செமீ மழை பெய்துள்ளது. ஈரோட்டில் 39.2 டிகிரிட செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் 21 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் எந்தவொரு மாவட்டத்திலும் வெப்பத்தில் பெரியளவில் மாற்றமில்லை.. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+