சென்னை உள்ளே நுழையும் "ஆல்ஃபா".. ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கு.. அசுர வேகத்தில் பறக்கலாம்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், அதன் இரண்டாம் கட்ட திட்டத்தில், circular loop எனப்படும் வட்டப் பாதைக்கு பதிலாக நேரடி "ஆல்ஃபா" மார்க்கத்தை செயல்படுத்த உள்ளது. அதாவது நகரின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு எதிர் பகுதிக்கு நேரடியாக ஒரே ரயில் செல்ல முடியும். ரயில் மாற வேண்டியது இல்லை.
இதன் மூலம், நகரின் தென்பகுதியிலிருந்து வடக்கு பகுதிக்கு சுமார் இரண்டரை மணி நேரத்தில் சென்று வர முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பயணிகளுக்கு மேம்பட்ட பயண அனுபவத்தை வழங்கும்.

ஆல்ஃபா வழித்தடம்
சிறுசேரி முதல் மாதவரம் வரையிலும் (தளம் 3), மாதவரத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரையிலும் (தளம் 5) மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். பயணிகள் நடைமேடை மாற்றமின்றி தடங்கள் மாறும் வசதியுடன் இந்த திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த ஆல்ஃபா வழித்தடம், 118.9 கி.மீ நீளமுள்ள இரண்டாம் கட்ட திட்டத்தின் 118 நிலையங்களையும் இணைக்கிறது.
"மாதவரம் வழியாக சிறுசேரி முதல் சோழிங்கநல்லூர் வரை இரண்டு தளங்களிலும் ஒரே ரயிலை இயக்க முடியும்" என்று சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"இரண்டாம் கட்ட திட்டம் 90 வினாடிகளுக்கு ஒருமுறை ரயில் இயக்கங்களை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆயினும், சேவை இடைவெளி பயணிகளின் எண்ணிக்கை, தடம் மாறும் புள்ளிகள் ஆகியவற்றைப் பொறுத்தது," என அந்த அதிகாரி தெரிவித்தார். மாதவரத்திலிருந்து போரூர் வழியாக சோழிங்கநல்லூருக்குச் செல்லும் ரயில்கள், போரூரைத் தாண்டிச் சென்று தடங்களை மாற்றி மேடவாக்கம் மற்றும் சோழிங்கநல்லூரை அடையும்.
நேரடி ரயில் சேவை
"தடம் மாறும் நேரம் ரயிலின் இயக்க அதிர்வெண்ணை இறுதி செய்யும் போது கருத்தில் கொள்ளப்படும்" என அந்த அதிகாரி கூறினார். இந்த ஆல்ஃபா வழித்தடம் அடையாறு, நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளிலிருந்து மாதவரம் வழியாக கோயம்பேடு, அண்ணா நகர், வில்லிவாக்கம் செல்ல நேரடி ரயில் சேவையை வழங்கும்.
திட்டத்தில் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் II (தளம் 3), கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை (தளம் 4), மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் (தளம் 5) ஆகிய மூன்று வழித்தடங்கள் உள்ளன. நான்காவது வழித்தடத்தின் பகுதியான போரூர் மற்றும் பூந்தமல்லி இடையேயான முதல் பிரிவு 2026 ஜனவரியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, சி.எம்.ஆர்.எல் நிறுவனம் 81.3 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு வட்டப்பாதையை முன்மொழிந்தது. மாதவரம், கோயம்பேடு, எல்காட், துரைப்பாக்கம், அடையாறு ஆகிய பகுதிகளை இணைக்கும் இந்த 88 நிலைய சேவை, இரண்டரை மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் நகரை சுற்றி வர அனுமதிக்கும் வகையில் 8.5 நிமிட இயக்க நேரத்துடன் திட்டமிடப்பட்டிருந்தது.
சுற்று பாதை இல்லை
மேடவாக்கம்-எஸ்.ஆர்.பி. டூல்ஸ் மற்றும் அடையாறு-ஆலந்தூர் போன்ற வழித்தடங்களில் குறைந்த பயணிகள் எண்ணிக்கை இருக்கும் என்ற ஆய்வுகளால், வட்டச் சேவை திட்டம் நிராகரிக்கப்பட்டது. ஒக்கியம் துரைப்பாக்கம் (தளம் 3) முதல் எல்காட் (தளம் 5) வரை சோழிங்கநல்லூரைத் தவிர்த்து, ஒரு கி.மீ. நீளமுள்ள மூன்று தூண்கள் கொண்ட பாலங்கள் கட்டும் திட்டமும், செலவுகளை அதிகரித்து, சோழிங்கநல்லூரில் பல கட்டிடங்களை இடிக்க நேரிட்டதால் கைவிடப்பட்டது.
தற்போதைய ஆல்ஃபா வழித்தடத்தில், பயணிகள் சோழிங்கநல்லூர் போன்ற முக்கிய சந்திப்பு நிலையங்களில் நடைமேடைகளை மாற்றிக்கொள்ள படிக்கட்டுகளையோ அல்லது மின்படிகளையோ பயன்படுத்தலாம்.
"பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், எதிர்காலத்தில் வட்டப் பாதையை இயக்க முடியும். அதற்காக, இரண்டு வழித்தடங்களையும் இணைக்கும் ஒரு கூடுதல் பாதையை நாங்கள் அமைத்து வருகிறோம்" என்று சி.எம்.ஆர்.எல். வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications