இனி தாம்பரத்தில் இருந்து வேளச்சேரிக்கு நொடியில் பயணிக்கலாம்.. சென்னையில் வருது சூப்பர் வசதி.. அட
சென்னை: தாம்பரத்திலிருந்து வேளச்சேரி வரை மெட்ரோவில் பயணம் மேற்கொள்வது விரைவில் சாத்தியம் ஆக போகிறது மக்களே. ஆம் இது விரைவில் நிஜமாகலாம்.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நேற்று SYSTRA MVA என்ற நிறுவனத்துடன் இணைந்து தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வரையிலான 24 கிமீ மாஸ் ரேபிட் டிரான்ஸ்போர்ட் சிஸ்டத்தை கிண்டி அல்லது லிட்டில் மவுண்ட் வரை நீட்டிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதற்கான ஆய்வுகள் நடக்க உள்ளது. அதாவது மெட்ரோவை இது வரை நீடிக்கும் 24 கிமீ தூரத்திற்கான ஏற்பாடுகள் நடக்க உள்ளன.

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.
இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய நிலையங்கள்: இந்த நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் வழித்தடம் 3ல் புதிய ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.4,058.20 கோடியில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டு உள்ளது. புதிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்துடன் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
கோயம்பேடு: இந்த நிலையில்தான் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் கோயம்பேடு மெட்ரோ அருகே உள்ள பல நில பகுதிகளில் முக்கியமான புதிய பல கட்டுமானங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கைகள், திட்டங்கள் போன்றவற்றை தயாரிப்பதற்கான ஏலத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையம், மார்க்கெட் அருகே இந்த கட்டுமானங்கள் வர உள்ளன.
மெட்ரோ மூலம் கட்டப்பட்டும் இந்த கட்டிடங்கள் அலுவலகம் அல்லது சில்லறை வர்த்தக இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களாகப் பயன்படுத்தப்படும். கட்டம் I திட்டத்தில் சில நிலையங்களில் கடைகள், கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்கான சிறிய இடங்களை CMRL ஏற்கனவே வாடகைக்கு விட்டுள்ளது.
பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதால், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CRML) வருவாயை அதிகரிக்க நிலையங்களுக்கு அருகில் கட்டிடங்களை கட்டி அலுவலகம் அல்லது சில்லறை இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களாக வாடகைக்கு விட திட்டமிட்டுள்ளது.
சிஎம்ஆர்எல் அதிகாரிகளின் கூற்றுப்படி, 54 கிமீ மெட்ரோ ரயில் நெட்வொர்க்கை தினசரி 2.97 லட்சம் பேர் பயன்படுத்துகிறார்கள் என்றாலும், டிக்கெட் கட்டணத்தை மட்டுமே நம்பாமல் வருவாயை அதிகரிப்பதற்கான வழிகளைக் கண்டறிவது முக்கியம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications