பயணிகள் வசதிக்காக... சென்னை மெட்ரோ ரயில்கள் சந்திக்க போகும் புதிய மாற்றம்!

பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில்களில் மேலும் இரண்டு பெட்டிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில்களில் மேலும் இரண்டு பெட்டிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை மெட்ரோ ரயிலில் 3 பொது பெட்டிகளும், 1 மகளிர் பெட்டியும் இருக்கும் நிலையில் அத்துடன் 2 பெட்டிகளை இணைத்து 6 பெட்டிகளாக அதிகரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

மெட்ரோ ரயிலுக்கு நாளுக்கு நாள் மக்களிடையே சென்னையில் வரவேற்பு அதிகரித்துள்ளதால் பெட்டிகளை அதிகரிக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னையில் போக்குவரத்துக்கு நெரிசலை குறைப்பதற்கான முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது., சென்டிரல் முதல் கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரையிலும், விம்கோ நகர் முதல் கிண்டி வழியாக விமான நிலையம் வரையிலும் சுமார் 55 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் எப்படி

சென்னையில் எப்படி

இதையடுத்து இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் நடந்து கொண்டிருக்கிறது. சென்னை மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 3 வது வழித்தடத்தில் 45.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதேபோல், சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை 4-வது வழித்தடத்தில் 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

எப்போது முடியும்

எப்போது முடியும்

மேலும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்தில் 47 கிலோ மீட்டர் தொலைவுக்கும் பணிகளும் சென்னை நடக்கிறது. ரூ.63,246 கோடியில் நடைபெறுநும் இரண்ட்ம் கட்ட மெட்ரோ பணிகளை 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதவரம்- சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவைக்காக, அடையாறு ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில் சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் பணிக்காக சுரங்கம் அமைக்கும் பணி சென்னை முழுவதும் தொடங்கி உள்ளது.

எப்படி இருக்கிறது

எப்படி இருக்கிறது

சென்னை மெட்ரோ ரயில் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 முதல் இரண்டரை லட்சம் பயணிகள் பயணிக்கிறார்கள். விடுமுறை நாட்களில் மற்றும் பீக் அவர்ஸ்களில் மெட்ரோவில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு பலரும் சொந்த வாகனங்களில் பயணிப்பதை விட மெட்ரோவில் பயணிப்பது நல்லது என்று முடிவு செய்து பயணிக்க தொடங்கி இருப்பதால் வருங்களில் இன்னமும் கூடுதலாக மெட்ரோ பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

6 பெட்டிகள்

6 பெட்டிகள்

இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை அதிகரிக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை மெட்ரோ ரயிலில் 3 பொது பெட்டிகளும், 1 மகளிர் பெட்டியும் இருக்கும் நிலையில் அத்துடன் 2 பெட்டிகளை இணைத்து 6 பெட்டிகளாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+