பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்!
சென்னை: சென்னை சென்ட்ரல் நிலையத்தில் கடந்த ஆண்டு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நான்கு மாத சிகிச்சை பலனளிக்காமல் அந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துகு வேலை தேடி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தனது குடும்பத்துடன் சிறுவன் வந்துள்ளான். கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி அந்த சிறுவன் ரயில் நிலையம் அருகே ஒரு டீக்கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் அந்த சிறுவனை ஏமாற்றி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த காலி ரயில் பெட்டிக்குள் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்தச் சிறுவனை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

வாய் மற்றும் ஆசனவாயில் கடுமையான காயங்களுடன் இருந்த அந்த சிறுவன் ரயில்வே போலீசாரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 4 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுவனின் உடல்நிலை தொடர்ந்து மோசம் அடைந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அந்த சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் சிகிச்சை பெற்ற போது அவனது வாக்குமூலம் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது/ தற்போது இந்த சிறுவன் உயரிழந்த நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கோடு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்!
- பாலில் விழுந்த மாம்பழம்.. அன்புமணி கைக்கு மொத்தமாய் போன பாமக! வலை போட்டு வேட்பாளர்களை தேடும் அய்யா!
- வேட்பாளரை கூட சரியா பார்த்து நிறுத்த தெரியாத விஜய்! வழக்கு, சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு சீட்
- 46 தனி தொகுதிகளில் நுழையும் அவர்கள் யார்? மதம் மாறியவர்களுக்கு இடமா? இந்து முன்னணி நறுக்
- நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி!
மேலும் போக்சோ சட்டம், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சிறுவன் உயிரிழந்த நிலையில் குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதே நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சென்னை சென்ட்ரல் போன்ற முக்கிய ரயில் நிலையத்திலேயே இது போன்ற ஒரு சம்பவம் நடந்திருப்பது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
மனைவி ஊருக்கு போன நேரத்தில்..வீட்டுக்கு வந்த கள்ளகாதலி! ப்ரிட்ஜில் நினைத்துப் பார்க்க முடியாத காட்சி -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
அம்மா, அக்கா கழுத்தை அறுத்து கொன்ற பெங்களூர் இளைஞர்.. கடன் பிரச்சனையால் தானும் தற்கொலைக்கு முயற்சி! -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்













Click it and Unblock the Notifications