பாதி சென்னையில் முழுசா ரோடு இல்லை.. இணைப்பு சாலைகளில் எல்லாம் குழி.. மாநகராட்சி செய்த அவசர வேலை
சென்னை: பாதி சென்னையில் முழுமையாக ரோடு இல்லாததால் மக்கள் அவதிப்பட்டனர். எல்லா இணைப்பு சாலைகளும் குண்டும் குழியுமாக இருந்ததால் மழை நீர் பல இடங்களில் தேங்கியது. பள்ளத்தில் ஆபத்தான முறையிலேயே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனிடையே சென்னை மாநாகராட்சி அவசரமாக கற்களை கொட்டி மூடும் பணியில் இறங்கி உள்ளது.
காலையில் கூகுளில் பார்க்கும் போதே சிவப்பு தக்காளிகள் சென்னை மேல் படர்ந்து இருந்தன. சென்னையில் சுழன்றபடி இருந்த நிலையை பார்த்த வானிலை ஆய்வாளர்கள்.. இன்றைக்கு சாத்து சாத்துன்னு சென்னையில் மழை சாத்த போகுது.. 20 செமீ மழை பெய்யலாம் என்று எச்சரித்தனர்.

இதில் ஹைலைட் என்னவென்றால் இரவு முழுவதும் விட்டு விட்டு மென்மையாக பெய்த மழை, காலையில் நின்றுவிட்டது. இதனால் காலை வானம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.. வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது.. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்கும் என்று ஏங்கிய மாணவர்கள் ஏமாந்து போனார்கள்.. அவசர அவசரமாக பள்ளிக்கு கிளம்பிய போதுதான், மழை தனது ஆட்டத்தை ஆரம்பித்தது..
சென்னையில் காலை 9 மணிக்கு மேல் தான் மழை ஆரம்பித்தது.. காலை 9 மணிக்கு தொடங்கிய மழை மாலை 4 மணி வரையிலும் வெளுத்து வாங்கியது. குறிப்பாக காலை 9 முதல் 12 மணி வரை கனமழை கொட்டியது.. அதன்பிறகு விட்டு விட்டு மழை பெய்து வந்தது.
கனமழை காரணமாக சென்னையில் ஏற்கனவே மோசமாக இருந்த சாலைகள் மொத்தமாக கரைந்தன. இணைப்பு சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாக இருந்ததால் அந்த இடங்களில் தண்ணீர் போய் தேங்கி கொண்டது. வாகன ஓட்டிகள் எங்கு பள்ளம் இருக்கிறது.. எங்கு சாதாரணமாக இருக்கிறது என்று தெரியாமல் பள்ளங்களில் வாகனத்தை இயக்கி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

சென்னையின் புறநகர் பகுதிகள், உண்மையில் பெரும் பாவம் என்பது இன்றைய மழை புரிய வைத்தது. பல சாலைகள் மிகவும் மோசமான நிலையில் ஏற்கனவே இருந்த நிலையில், இந்த மழை,, சின்ன சின்ன பள்ளங்களை அண்டா பள்ளங்களாக மாற்றியது,. தாம்பரம், முதல் கோவிலம்பாக்கம் வரையிலும் சோழிங்கநல்லூர் முதல் பள்ளிக்கரணை வரையிலும் பல்வேறு இடங்களில் இணைப்பு சாலைகள் மிகவும் மோசமாக இருந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.
இதேபோல் சென்னை நகருக்குள்ளேயும் பல்வேறு பகுதிகளில் இணைப்பு சாலைகள் கடுமையாக சேதம் அடைந்தது. பாதி சென்னையில் ரோடுகள் முழுமையாக மழைக்கு இரையாகின. மழை மொத்தமாக சென்னையின் பல்வேறு சாலைகளை காலி செய்துவிட்டது. சாலைகளில் பள்ளம் என்பது போய், பள்ளத்தில் தான் சாலை ஆங்காங்கே இருக்கிறது என்கிற நிலை ஏற்பட்டது.

இதனிடையே சாலைகளில் மோசமான பள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் போர்கால அடிப்படையில், கொட்டும் மழையிலும் சல்லிகற்களை கொட்டி பள்ளங்களை மாநகராட்சி பணியாளர்கள் மூடி வருகிறார்கள். எனவே உங்கள் பகுதியில் மோசமான பள்ளம் இருந்தால், அல்லது தண்ணீர் அதிகமாக தேங்கினால் உடனே மாநகராட்சியை அழைத்து புகார் கூறுங்கள்.. புகாரின் அடிப்படையில் சாலைகளை சரிசெய்வது, தண்ணீரை வெளியேற்றுவது போன்ற பணிகளை செய்து வருகிறார்கள்.. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னைவாசிகள் கவனமாக இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications