Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அர்த்த ராத்திரியில் சபலப்பட்ட மயிலாப்பூர் இளைஞர்.. இன்ப பரிசை எதிர்பார்த்து போனவருக்கு நடந்த ஏடாகூட சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் ஆபாச செயலியில் அறிமுகம் இல்லாத நபரிடம் பேசி, அவரது பேச்சை நம்பி தனிமையில் சந்திக்க போயிருக்கிறார். ஆனால், அங்கு சென்ற பிறகுதான் தன்னுடைய செயல் எவ்வளவு முட்டாள்தனம் என்பது தெரியவந்துள்ளது. அப்படி என்னதான் கல்லூரி மாணவருக்கு நடந்தது என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் லெவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 23 வயதான இந்த இளைஞர் இசைக் கல்லூரியில் படித்து வருகிறார். எப்போதும் செல்போனில் மூழ்கி கிடக்கும் லெவின், சமூக வலைத்தளங்கள் மட்டும் பயன்படுத்தி வராமல் வில்லங்க செயலியையும் பயன்படுத்தியிருக்கிறார்.

chennai-mylapore-man-duped-and-robbed-by-gang-pretending-to-be-woman

இன்ப பரிசு காத்திருக்கிறது

அதாவது, கிரைண்டர் என்ற டேட்டிங் செயலியை பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த செயலியில், எதாவது புது நட்பு கிடைக்குமா? என வலை வீசிய லெவினுக்கு மனதை மயக்கும் குரலில் பெண் ஒருவர் பேசியுள்ளார். தொலைபேசியில் பேசிய அந்த பெண், மயிலாப்பூர் வடக்கு மாட வீதி அருகே வந்தால் இன்ப பரிசு காத்திருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார்.

ஏடாகூடமாக வீடியோ எடுத்த கும்பல்

இதைக் கேட்டதும், இன்ப அதிர்ச்சி அடைந்த கவுதம், அந்த பெண் கூறியபடி நள்ளிரவு 12 மணிக்குப் மேல், ஆள் நடமாட்டம் ஒதுங்கிய பிறகு, இன்ப அதிர்ச்சியை பார்க்க சென்று இருக்கிறார். அப்போது அங்கு வந்த இரண்டு இளைஞர்கள், அருகில் இருந்த கழிவறைக்கு இழுத்து சென்று கத்தியைக் காட்டி மிரட்டியிருக்கிறார்கள். மேலும் அவரை கொடூரமாக தாக்கியதோடு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

கையில் பணம் இல்லாததால், கூகுள் பே வாயிலாக ரூ.1,300 பணத்தை அக்கவுண்டிற்கு மாற்ற சொல்லி மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன லெவின் பணத்தையும் அனுப்பியுள்ளார். அதோடு விடாமல், கவுதமையை ஏடாகூடமாக வீடியோ எடுத்த அந்த கும்பல், இங்கு நடந்ததை யாரிடமாவது சொன்னால், அவ்வளவுதான்.. இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மானத்தை வாங்கிவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

துணிச்சலாக போலீசிடம் சென்ற இளைஞர்

எனினும், இளைஞர் கவுதம் துணிச்சலாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். கூகுள் பே வாயிலாக பணத்தை திருடியதால் கவுதமிடம் பணம் பறித்த இருவரையும் போலீசார், உடனடியாக பிடித்தனர். விசாரணையில், கவுதமிற்கு ஆசை வலையை விரித்த நூதன வழிப்பறியில் ஈடுபட்டது மயிலாப்பூர் மாங்கொல்லை கார்டன் பகுதியை சேர்ந்த சூர்யா, அஜய் என்பது தெரியவந்தது.

அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கைதான இருவர் மீதும் ஏற்கனவே வழக்குகள் இருப்பது தெரியவந்தது. ஏற்கனவே வழிப்பறி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் இருவரும் கைதாகியுள்ளனர். விசாரணைக்கு பிறகு இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றில் பழகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் கேட்கும் தனிப்பட்ட விவரங்களையோ, புகைப்படங்களையோ பகிர்ந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீசார், ஆன்லைனில் பழகியவர்களை நம்பி தனியாக செல்வதையும் தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர். சமீபகாலமாக கிரைண்டர் போன்ற டேட்டிங் செயலிகளில்தான் அதிக அளவில் குற்ற நிகழ்வுகள் நடப்பதால் இத்தகைய செயலிகளை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+