நந்தனம் அரசு கலைக்கல்லூரி பெயர் மாற்றம்.. இனி பெண்களும் பயிலலாம்.. இருபாலர் கல்லூரியாக மாற்றி அரசாணை
சென்னை: சென்னை நந்தனம் ஆடவர் கலைக்கல்லூரி இந்த ஆண்டு முதல் இருபாலருக்கான கலைக்கல்லூரியாக செயல்படும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்மூலம் இதுவரை மாணவர்கள் மட்டுமே படித்து வந்த இந்த கல்லூரியில் நடப்பு கல்வியாண்டு முதல் மாணவிகளும் படிக்க முடியும்.
சென்னையில் உள்ள பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற கல்லூரியில் ஒன்று நந்தனம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி. கடந்த 1969 ம் ஆண்டு முதல் ஆடவர் கல்லூரியாக இது செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு மட்டும் மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு இந்த கல்லூரியை ஆண், பெண் என இருபாலரும் பயிலும் வகையிலான இருபாலர் அரசு கலைக்கல்லூரியாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது.
அதாவது சென்னை அருகே குன்றத்தூர், வடநெம்மேலி, பெரும்பாக்கம், திருவொற்றியூர் மற்றும் ஆர்.கே.நகர் ஆகிய பகுதிகளில் அரசு இருபாலர் கல்லூரிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இதனால் நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கை சரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் இளநிலை வகுப்பில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிப்பதால், காலியிடங்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்தது. இதனால் நந்தனம் ஆடவர் கலைக்கல்லூரியை இருபாலர் கல்லூரியாக மாற்றினால் மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் பயிலலாம். இதனால் கல்லூரியில் சேர்க்கையும் அதிகரிக்கும் என அரசு திட்டமிட்டது.
மேலும் நந்தனம் ஆடவர் கலைக்கல்லூரியை இருபாலர் கல்லூரியாக மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தான் தற்போது நந்தனம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி என்பது இருபாலர் பயிலும் வகையிலான அரசு கலைக்கல்லூரியாக மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த அரசாணையில், 2024-25 கல்வியாண்டு முதல் நந்தனம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி என்பது இருபாலர் கல்லூரியாக செயல்படும். இந்த கல்லூரி இனி அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி என்பதற்கு பதில் அரசு கலைக்கல்லூரி என்ற பெயரில் அழைக்கப்படும். இந்த கல்லூரியின் பெயர் மாற்றம் உள்பட அனைத்து விஷயங்களும் கல்லூரி ஆட்சி மன்றக் குழுவில் விவாதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முடிவின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications