சென்னை- நெல்லை வந்தே பாரத் எங்கெல்லாம் நிற்கும்? மதுரையைவிட்டா அடுத்து வேறு எங்காம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் எங்கெல்லாம் நிற்கும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

வந்தே பாரத் ரயில்களின் என்ஜின்கள் தமிழகத்தில் பெரம்பூர் ஐசிஎஃப்பில் செய்யப்படுகிறது. இது புல்லட் ரயில் போல் வேகத்தில் இயங்கும். இந்த ரயிலில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைய உள்ளன. இதில் ஜிபிஎஸ் டிராக்கர் வசதி, கேமரா வசதி, ஏசி வசதி என அனைத்தும் உள்ளது.

Chennai- Nellai Vande Bharat train stoppings

நெடுந்தூரங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த வந்தே பாரத் ரயில் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல வேண்டுமானால் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 மணி நேரம் ஆகும். ஆனால் வந்தே பாரத் ரயிலில் 5.30 மணிக்கு நேரம்தான் ஆகிறது.

இது போல் முக்கிய நகரங்களில் இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை- மைசூர், சென்னை-- கோவை, திருவனந்தபுரம்- காசர்கோடு ஆகிய 3 வழித்தடங்களில் வந்தே பாரத் இயங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து நெல்லை- சென்னை மார்க்கத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை மத்திய இணையமைச்சர் எல் முருகன் வெளியிட்டிருந்தார். திண்டுக்கல்- மதுரை- நெல்லை இடையிலான தண்டவாளததை 130 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் பலப்படுத்த வேண்டும். அதன் மூலம் வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் 7 மணி நேரமாக குறையும். அத்துடன் ரயில்வே அறிவித்தபடி ஆகஸ்ட் மாதம் முதல் சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்கப்படும் என தெரிகிறது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் இயக்கம் தொடங்கப்படும். சூப்பர் பாஸ்ட் ரயில்கள் மூலம் மேற்கண்ட வழித்தடத்தில் 10 மணி நேரம் பயணிக்கப்படும். வந்தே பாரத் ரயில் செயல்பாட்டிற்கு வந்தால் இந்த பயண நேரம் 8 மணி நேரமாக குறையும் என தெரிகிறது.

நெல்லையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில், பிற்பகல் 2 மணிக்கு சென்னை வந்தடையும். மீண்டும் சென்னையிலிருந்து மதியம் மூன்று மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 11 மணிக்கு நெல்லையை சென்றடையும் என தெரிகிறது. நெல்லையிலிருந்து கிளம்பும் வந்தே பாரத் ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில் சென்னையில் எந்த ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பொதுவாக தென் தமிழகத்திற்கு செல்லும் ரயில்கள் எழும்பூரிலிருந்துதான் புறப்படும். ஆனால் தாம்பரத்தை சுற்றியுள்ள பகுதி மக்கள் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டால் நிறைய பேர் பயனடைவார்கள் என கூறுகிறார்கள். அதனால் ரயில்வே நிர்வாகம் அதுகுறித்து யோசனையில் இருந்து வருகிறது.

ஏசி சேர் கார் பயண கட்டணம் ரூ 3000 வரை இருக்கலாம் என தெரிகிறது. எக்கனாமி சேர் கார் பயண கட்டணம் 1400 ரூபாய் அல்லது 1500 ரூபாய் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் உணவும் வழங்கப்படவுள்ளது. வந்தே பாரத் ரயிலின்பராமரிப்பு பணிகள் இந்த ஜூலை மாதம் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+