Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை பெரம்பூரில் 4வது முனையம் மட்டுமல்ல.. அம்பத்தூர் வரை 2 புதிய ரயில் பாதை.. ரயில்வே குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரம்பூர் ரயில் நிலையத்தை சென்னையின் நான்காவது ரயில் முனையமாக மாற்றிட தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில்,சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய முனையங்கள் உள்ளன. பெரம்பூரை ரயில் முனையமாக மாற்ற வேண்டும் என்றால், பெரம்பூர் முதல் அம்பத்தூர் இடையே 6.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5 மற்றும் 6-வது புதிய ரயில் பாதைகள் அமைக்க வேண்டும். எனவே அதற்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்த நிலையில், ரூ.182 கோடியில் 5 மற்றும் 6-வது புதிய ரயில் பாதைகள் அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னையின் மிக முக்கியமான ரயில்,ஏன் தமிழ்நாட்டிலேயே மிக முக்கியமான ரயில் நிலையம் என்றால் அது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் தான். சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்கு மாவட்டங்கள், வடமாநிலங்களுக்கு அதிக அளவில் ரயில்கள் செல்கின்றன. தேனி, பழனி உள்பட தென்மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கும் ஒரு சில ரயில்கள் செல்கின்றன. சென்னைக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டிற்குள் உள்ள மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, வடமாநிலத்தவர் வருகையும் நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. ஆனால் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இயக்க முடியாத நிலையில் தெற்கு ரயில்வே இருக்கிறது.

Chennai Not only the 4th terminal in Perambur but also 2 new railway lines up to Ambattur

சென்னை சென்ட்ரல்

ஏனெனில் பெரும்பாலான வடமாவட்டங்களுக்கும், வட மாநிலங்களுக்கும், மேற்கு மாவட்டங்களுக்கும் சென்னை சென்ட்ரலில் இருந்து தான் ரயில்கள் இயக்கப்படுகிறது. எழும்பூருக்கு அடுத்தபடியாக தாம்பரத்தில்உள்ளது போல் முனையம், சென்ட்ரல் வழித்தடத்தில் இல்லை.. எனினும் பயணிகள் வசதிக்காக பெரம்பூர் ரயில் நிலையத்தில் வரும் போது மட்டும் ரயில்கள் நின்றுசெல்கின்றன. பெரம்பூரை பொறுத்தவரை சென்ட்ரலில் இந்து வெறும் 8 கிமீ தூரம் தள்ளி தான் இருக்கிறது.

ஆவடி நிராகரிப்பு

ஆவடியை நான்காவது முனையமாக மாற்றலாம் என்றால் அங்கு, தாம்பரம் போல் கட்டமைப்புகள் கிடையாது. அதேநேரம் பெரம்பூரிலுமே அப்படியான கட்டமைப்பு இல்லை. இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக பெரம்பூரில் புதிய ரயில் முனையத்தை உருவாக்கி,அங்கிருந்து கூடுதல் ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டது. இதற்காக, பெரம்பூர் ரயில் நிலையம் ரூ.360 கோடியில் 4-வது புதிய ரயில் முனையமாக மாற்றப்பட உள்ளது. இங்கு பல்வேறு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட இருக்கிறது.

ரயில் பாதைகள்

பெரம்பூர் ரயில் நிலையத்தை ரயில் முனையமாக மாற்றிட, ரயில்வே வாரியத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்திருந்தது. அத்துடன் பெரம்பூர்-அம்பத்தூர் இடையே ரூ.182 கோடியில் 6.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5, 6-வது புதிய ரயில் பாதைகள் அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில், பெரம்பூர் ரயில் நிலையத்தை 4-வது புதிய முனையமாக மாற்றவும், கூடுதலாக 5, 6-வது பாதைகள் அமைக்கவும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்திருக்கிறது.

பெரம்பூரில் 4வது ரயில் முனையம்

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், பெரம்பூர் ரயில் நிலையத்தை 4-வது ரயில் முனையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து ரயில்வே வாரியத்திடம் வழங்கி உள்ளோம். ரூ.360 கோடியில் 4-வது புதிய முனையம் அமைப்பதற்கான இந்த விரிவான திட்ட அறிக்கைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்திருக்கிறது.

பெரம்பூர்-அம்பத்தூர் 5வது, 6வது பாதை

அதன்படி, 2028-ம் ஆண்டு இறுதிக்குள் புதிய ரயில் முனைய பணிகளை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். இந்த முனையத்துடன் சேர்த்து, பெரம்பூர்-அம்பத்தூர் இடையே 5, 6-வது புதிய ரயில் பாதைகளும் அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய பாதைகள் அமையும்போது, அம்பத்தூரில் இருந்து பெரம்பூருக்கு தடையின்றி ரயில்களை எளியதாக இயக்க முடியும். பெரம்பூரில் தற்போது, 4 நடைமேடைகள் உள்ளன. கூடுதலாக 2 நடைமேடைகள் அமைக்கப்பட உள்ளது" இவ்வாறு கூறினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+