Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுதந்திர தின விடுமுறை.. சென்னை - மதுரை செல்ல ரூ.1,549 கட்டணம்.. ஆம்னி பேருந்துகளில் நடக்கும் கொள்ளை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுதந்திர தின விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு லட்சக்கணக்கானோர் பயணித்து வரும் நிலையில், ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.1,600 கட்டணமாகவும், சென்னையில் இருந்து நெல்லைக்கு ரூ.2,000க்கும் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி நாளை முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. அதேபோல் ஆடி மாதம் என்பதால், தங்களின் சொந்த ஊர்களில் கோயில் திருவிழாக்கள் களைகட்டி வருகின்றன. இதனால் சென்னையில் இருந்து பொதுமக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றன. இதனால் இன்று முதல் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Independence Day Omni Bus Bus Tickets

இதற்காக கிளாம்பாக்கம், கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சுமார் 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நேற்று முதலே சிறப்பு பேருந்துகளின் இயக்கம் தொடங்கியுள்ள நிலையில், இதனை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை நடப்பது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல சாதாரணமாக ரூ.560 முதல் ரூ.1,500 வரை கட்டணம் இருக்கும். குளிர்சாதன வசதி இருக்கும் பேருந்துகளில் ரூ.1,500 வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் தற்போது சென்னையில் இருந்து மதுரை வருவதற்கு சாதாரண பேருந்துகளிலேயே ரூ.1,200 முதல் 1,500 வரை வசூலிக்கப்படுகின்றன. ஏசி பேருந்துகளில் ரூ.1,600க்கு மேல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

பேருந்து டிக்கெட் புக் செய்யப்படும் செயலிகளில் இந்த கட்டணம் வெளிப்படையாகவே வசூலிக்கப்பட்டு வருவது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணமாக ரூ.1300 முதல் ரூ.2000 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் எப்படியாவது சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்பதால், வேறு வழியின்றி ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை பொருட்படுத்தாமல் பயணித்து வருகின்றனர். அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டும் ஆம்னி பேருந்துகளில் அனைத்து சீட்களும் புக்காகி இருக்கின்றன. ஒவ்வொரு முறை பண்டிகை விடுமுறையின் போதும், ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளை தொடர்ந்து வருகிறது. இதுகுறித்த புகார்கள் எழுந்தாலும், தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க தவறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+