பட்டினப்பாக்கம் லூப் சாலை அடியோடு மாறுகிறது.. டெண்டர் வெளியிட்டது சென்னை மாநகராட்சி
சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையின் 100-க்கும் மேற்பட்ட மீன் கடைகள், அங்கிருந்து அகற்றப்பட்டு,நொச்சிக்குப்பம் நவீன மீன் அங்காடிக்கு மாற்றப்பட்டது. தற்போது பட்டினப்பாக்கம் லூப் சாலை பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட உள்ளது. இதற்கு சென்னை மாநகராட்சி டெண்டர் வெளியிட்டிருக்கிறது. டெண்டர் கோரும் நிறுவனங்கள் நாளை மாலை 3 மணிக்குள் டெண்டர் கோரி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையின் 100-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் சாந்தோம் சாலை குறுகிய சாலை என்பதால் கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரை உள்ள பிரதான சாலை ஒரு வழிப்பாதையாக மாறியது. இதன் காரணமாக சென்னை மெரினாவில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினம்பாக்கம் வரை செல்லும் வாகனங்கள், லூப் சாலை வழியாக ஒருவழி பாதையில் திருப்பிவிடப்பட்டன. ஏற்கனவே மீன் கடைகள் அங்கு இருந்த காரணத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த கடைகளை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஒரு கட்டத்தில் கடைகளையும் அகற்ற மாநகராட்சி முடிவு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அரசு, நொச்சிக்குப்பபத்தில் நவீன மீன் அங்காடி கட்டித்தர ஒப்புக்கொண்டது. அதன்படியே நவீனமீன் அங்காடியை அரசு கட்டித்தந்த நிலையில், கலங்கரைவிளக்கம் வளைவு திரும்பி லூப் சாலை வழியாக ஒருவழி பாதையில் வாகனங்கள் சென்றுவருகின்றன. அதேநேரம், பட்டினப்பாக்கம் லூப் சாலை கடைகள் அமைக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், பட்டினப்பாக்கம் லூப் சாலை பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் மறுசீரமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ரூ.17 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெண்டர் கோரும் நிறுவனங்கள் நாளை மாலை 3 மணிக்குள் டெண்டர் கோரி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது..
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையை மேலும் மக்கள் பயன்படும் வகையில் மறுசீரமைக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, பாதுகாப்பாக கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி, கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை குறித்து விரிவாக அறிக்கை தயாரிக்கப்பட இருக்கிறது.
இந்த பகுதியில் மீனவ மக்கள் அதிகமாக இருப்பதால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் வசதிகள் கொண்டுவர திட்டமிடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளது. நகர்ப்புற வாழ்விடத்துக்கு ஏற்றவாறு மறுசீரமைப்பு செய்ய சாத்தியக்கூறுகள் இருக்கும் பட்சத்தில் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கும். முதற்கட்டமாக தற்போது ஆய்வுகள் மற்றும் கருத்துகள் கேட்கும் பணிகள் மட்டுமே நடைபெறும் என்று கூறினர்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications