கொரோனாவைவிட என்பிஆர் ஆபத்தானது.. அறிவித்த தவ்ஹீத் ஜமாத்அத்.. சென்னையில் மாபெரும் பேரணி, போராட்டம்
சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு நடுவேயும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என இஸ்லாமியர்கள் இணைந்து சிஏஏ உள்ளிட்டவற்றுக்கு எதிராக, சென்னையில் இன்று போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் அமைப்பினர் கடந்த மாதம் 14ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்கள் போராட்டம் 32வது நாளை எட்டிய நிலையில், கொரோனா வைரஸ் பரவி வருவதை காரணமாகச் சொல்லி, போராட்டத்தை ஒத்திவைக்க பல இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்தனர். தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங்களும் ஒத்திவைக்க அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இஸ்லாமிய அமைப்புகள் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் காஜாமொய்தீன் பாகவி இந்த கோரிக்கையை வைத்தார்.
#WATCH Chennai: People including Tamil Nadu Thowheed Jamath members continue their protest against CAA, NRC and NPR near Madras High Court. pic.twitter.com/T7y8qfeoLI
— ANI (@ANI) March 18, 2020
எனவே, வண்ணாரப்பேட்டையில் நடந்து வந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. வைரஸ் பரவுவதை தடுக்க போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக போராட்டக் குழு அறிவித்தது. ஆனால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதை ஏற்கவில்லை.

கொரோனாவை விட NPR ஆபத்தானது! இறைவன் விரும்பினால், ஜெயில் நிரப்பும் போராட்டம் 2020 மார்ச் 18 புதன்கிழமை திட்டமிட்டபடி நடக்கும் என்று,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில்தான், இன்று சென்னை ஹைகோர்ட் அருகே நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்கள், ஆண்கள் பேரணி நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
-
கோவை டூ தென்காசி வரை.. அடுத்த 3 மணி நேரம் பிச்சு உதறப்போகுது கனமழை.. உஷார் மக்களே! -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
சென்னையின் மிக முக்கிய இடத்தை.. அப்படியே செதுக்க போறாங்க.. களமிறக்கப்பட்ட இரும்பு ராட்சசன்! -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு! -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்!











Click it and Unblock the Notifications