Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்ஞ்ச் கூட நகரல.. மொத்தமா "ஜாம்" ஆன சென்னை ரோடு..நள்ளிரவிலும் பரபரபத்த பெருங்களத்தூர், ஜிஎஸ்டி சாலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் வெளியூர்களுக்கு கிளம்பி சென்றதால், நள்ளிரவையும் தாண்டி கடும் போக்குவரது நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினங்களாக இருப்பதால், லட்சக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊர்களுக்கு கிளம்பி செல்ல கடந்த 4 நாட்களாகவே தயாராகி வந்தனர்.. அந்தவகையில், சென்னையிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள், சொந்த ஊருக்கு கிளம்பினார்கள்..

சிறப்பு பேருந்துகள்: கிளாம்பாக்கத்தில் இயக்கப்படும் 2,000 சிறப்புப் பேருந்துகளையும் சேர்த்து மொத்தம் 4,167 பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன. இதைத்தவிர, தங்கள் சொந்த வாகனங்களிலும் பயணித்தர்.. கார், வேன் உள்ளிட்டவைகளையும் புக் செய்து, பயணமானார்கள். இதனால், அனைத்து வாகனங்களும் சேர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒரே நேரத்தில் வரிசைகட்டி நிற்க ஆரம்பித்துவிட்டன.

chennai perungalathur gst road

பூந்தமல்லி பகுதியிலும், போக்குவரத்து வாகனங்கள் வரிசைகட்டி நின்றன.. சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதாலும், பூவிருந்தவல்லி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, நேற்று மாலையிலிருந்தே சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்ல ஆரம்பித்துவிட்டது..

தாம்பரம் ஜிஎஸ்டி: பயணிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளானார்கள்.. குறிப்பாக, தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது. அதேபோல,

ஒருவேளை பயணிகள் சொந்த வாகனங்களில் சென்னையிலிருந்து செல்ல நேர்ந்தால், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் ஜிஎஸ்டி சாலையை தவிர்த்துவிட்டு மற்ற வழித்தடங்களை பயன்படுத்தி செங்கல்பட்டு சென்று விடலாம் என்று போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

தாம்பரம் பைபாஸ் : ஜிஎஸ்டி சாலையை தவிர்த்து, மீஞ்சூர் - வண்டலூர் பைபாஸ் சாலையிலும் நெரிசல் இல்லாமல் செய்யலாம்.. அதேபோல் மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையிலும் சென்று பெருங்களத்தூரை அடையலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சொல்லும்போது, "சுங்கச்சாவடிகளில் விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கவுண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அதிக ஸ்கேனர்களைப் பயன்படுத்துதல் மற்றும் அதிக வாகனங்கள் செல்லும் திசையில் அதிக ஊழியர்களை ஈடுபடுத்துதல் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

கட்டணம் ரத்து: ஆயுத பூஜையை போலவே, தீபாவளி பண்டிகையின் போதும், கட்டுப்பாடற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில், கட்டணத்தை விலக்கி, வாகனங்களை இலவசமாக அனுமதிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று மாலை முதலே தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கப்படாமல் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. இது வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

விடிய விடிய பஸ்களின் நெரிசல் காணப்பட்ட நிலையில், இன்று காலையிலிருந்து கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு பகுதியில் நெரிசல் குறைந்துள்ளது.. மக்கள் கூட்டம் கொஞ்சமும் இல்லாமல், இயல்பாகவும், அமைதியாகவும் காணப்பட்டு வருகிறது. வழக்கமாக தீபாவளி, பொங்கல் பண்டிகை தினத்தன்றுகூட, தாம்பரம்,பெருங்களத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். ஆனால், நேற்று இரவு கடும்கூட்டத்தால், திக்குமுக்காடிய கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு, தற்போது நெரிசலின்றி காணப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+