Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெருங்களத்தூரில் 6வது மாடிக்கு அவசரமாக ஓடிய ஐ.டி கம்பெனி நபர்.. இந்த பெண்ணுக்காகத்தானா? கடவுளே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் தற்கொலைகளும், கொலைகளும் அதிகமாகி கொண்டே வருகின்றன.. குறிப்பாக இளம் தலைமுறையினரின் தற்கொலைகள் அதிகரித்து உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.. இதற்கு பெரும்பாலும் புரிதல் குறைபாடுகளே காரணம் என்றும் மனநல மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.. இதோ நேற்றுகூட ஒரு தற்கொலை தலைநகரம் சென்னையில் நடந்துள்ளது.. இதுகுறித்த விசாரணையை போலீசார் முழு வீச்சில் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் சூரிய பிரகாஷ்.. 26 வயதாகிறது..
இவர் பெருங்குளத்தூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றார்.

Chennai Perungalathur IT company 6

அவசர அவசரமாக ஓடினார்

இந்தநிலையில் இன்று வழக்கம்போல் வேலைக்கு வந்துள்ளார் பிரகாஷ்.. அப்போது டியூட்டியில் இருந்தபோது அவருக்கு ஒரு போன் வந்துள்ளது.. அந்த அழைப்பை பேசி முடித்ததுமே பதற்றமானார் சூரிய பிரகாஷ்.. அவசர அவசரமாக அலுவலகத்தில் உள்ள 6வது முடிக்கு ஓடினார்.. அங்கிருந்து ஒரு நிமிடம்கூட யோசிக்காமல் திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதைப்பார்த்து சக ஊழியர்கள், அலறிடியத்துக் கொண்டு ஓடினார்கள்.. உடனடியாக இந்த சம்பவம் குறித்து பெருங்களத்தூர் பீர்க்கன்காரனை போலீசுக்கு தகவல் தந்தார்கள்..

போலீசாரும் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்தார்கள்.. ரத்த வெள்ளத்தில் விழுந்த கிடந்த சூரிய பிரகாஷின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அத்துடன், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சூரிய பிரகாஷ் காதல்

இதில் முதல்கட்டமாக சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது.. அதவாது, கடந்த 4 வருடங்களாக ஒரு பெண்ணை,சூரிய பிரகாஷ் உயிருக்கு உயிராக காதலித்து வந்தாராம்.. அந்த பெண் திடீரென பிரகாஷிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.. அத்துடன், சூரிய பிரகாஷின் காதலையும் ஏற்க மறுத்துள்ளார்..

இந்த அதிர்ச்சியை தாங்கி கொள்ள முடியாத சூரிய பிரகாஷ், 6வது மாடிக்கு ஓடிச்சென்ற, மாடியில் இருந்து கீழே குறித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.

பெருங்களத்தூர் ஐடி நிறுவனம்

பெருங்களத்தூர் பகுதியில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர், டியூட்டியிலிருந்தபோதே, 6வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் தந்து வருகிறது.

திருவொற்றியூரை சேர்ந்தவராம் சூரிய பிரகாஷ்.. தனியார் ஐடி நிறுவனத்தில் 4 வருடங்களாக பணியாற்றி வந்திருக்கிறார்.. சம்பந்தப்பட்ட பெண்ணையும் 4 வருடங்களாகவே காதலித்து வந்துள்ளார்.. அந்த பெண் எதற்காக பேசுவதை நிறுத்தினார்? கடைசியாக யாரிடம் போனில் பேசினார்? என்றெல்லாம் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

பெருகும் தற்கொலைகள்

சமீபகாலமாகவே, இளைஞர்களின் தற்கொலை மட்டுமல்ல, கொலைகளும் அதிகமாகி வருகிறது.. அதிலும் உயிருக்கு உயிராக காதலித்த பெண்களாலேயே இவர்கள் கொல்லப்படுவது அதைவிட கொடுமையானது..

கேரளா ஷாரோன் கொலை முதல் மேகாலயா ஹனிமூன் கணவர் கொலை வரை, இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.. இந்த பெருங்களத்தூர் மரணத்தை பொறுத்தவரை, 4 வருடம் சூரிய பிரகாஷை, அந்த பெண் காதலலித்ததாக சொல்கிறார்கள்.. ஒருவேளை அது உண்மையானால், அப்பாவி உயிரை பறித்த அந்த பெண்ணும் குற்றவாளிதானே??

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+