பரங்கிமலை பறக்கும் ரயில்.. உடைந்தது பாலம் மட்டுமல்ல.. சென்னை மக்களின் நம்பிக்கையும் கூட!
சென்னை: சென்னையில் வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் பாதை கட்டுமானப் பணியின் போது பாலம் திடீரென இடிந்து விழுந்திருக்கிறது. வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் பல்வேறு பிரச்சனைகள் வந்துள்ளன. என்று தான் இந்த ரயில் ஓடப்போகிறது என்று சென்னை மக்கள் ஏக்கத்துடன் பார்க்கும் நிலை இருக்கிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், போக்குவரத்து சேவையை அதிகரிக்கும் வகையிலும் பறக்கும் ரயில் திட்டம் 1980களில் திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தின்படி, சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரை 1995ம் ஆண்டு பறக்கும் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்தது. அதன்பிறகு அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 1997ல் மயிலாப்பூர் வரை பறக்கும் ரயில் சேவை வந்துவிட்டது. அதன்பிறகு அடுத்த 10 வருடத்தில் மயிலாப்பூர் வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் பாதை வந்துவிட்டது. இப்போது தென் சென்னை இந்த அளவிற்கு வளர்ந்திருக்க காரணம் பறக்கும் ரயில் பாதை தான் முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.

இதனிடையே 3ம் கட்டமாக வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கியது தெற்கு ரயில்வே. இந்த நிலையில், 90 சதவீத பணிகள் வேகமாக முடிந்த நிலையில், நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையால் ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் மற்றும் பரங்கிமலை இடையே வெறும் அரை கிலோ மீட்டருக்கு சிக்கல் எழுந்தது. பல ஆண்டுகளாக பாதை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இப்பிரச்சினைக்கு கடந்த ஆண்டுதான் தீர்வு காணப்பட்டது. உச்ச நீதிமன்றம் வரை பிரச்சனை போன பின்னரே தீர்வு வந்தது. ஒரு வழியாக ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியை வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் முடிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பாலத்தை தாங்கும் தூண்கள் அமைத்து, அதன் மீது தாங்கு பாலம் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
தற்போது, பரங்கிமலை ரயில் நிலையத்தை ஒட்டிய 500 மீட்டர் பாதையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி ஆதம்பாக்கம் அருகே தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை அருகே 2 தூண்களுக்கு இடையே மேம்பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியில் அடுத்த கட்டப்பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில் 2 தூண்களுக்கு இடையே சுமார் 60 அடி நீளம் கொண்ட பாலத்தின் ஒரு பகுதி நேற்று மாலை 6.10 மணியளவில் திடீரென இடிந்து கீழே விழுந்தது. பாலம் விழும் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த குடியிருப்புவாசிகள் ஓடிவந்து அங்கு யாரேனும் சிக்கியுள்ளார்களா என பார்த்தனர்.
வழக்கமாக இந்த பாலத்தின் கீழ் பொதுமக்கள் மாலை நேரத்தில் வருவார்கள். ஆனால், நேற்று அதிஷ்டவசமாக யாரும் அப்பகுதியில் இல்லை. இதனால் உயிர்சேதம் ஏற்படவில்லை. இதையடுத்து விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஆதம்பாக்கம் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். வேளச்சேரி - பரங்கிமலை வரை மேம்பாலம் அமைக்கும் திட்டத்தில் 500 மீட்டர் பாலப்பணி இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் பாலம் இடிந்து விழுந்த சம்பவம், எப்போது பணிகள் முடியும் என்ற கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பில், "வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 157 - 158 தூண்களுக்கு இடையே 40 மீட்டர் நீளத்தில் பாலத்தின் மேற்பகுதி சமீபத்தில் பொருத்தப்பட்டது. இதன் ஒரு பகுதி தூணில் சரியாக பொருத்தப்படாததால் சரிந்து விழுந்தது. இந்த பணியின்போது, போக்குவரத்து மாற்றப்பட்டு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மேற்கொண்டதால் எந்தவித உயிரிழப்பும், பொருட்சேதமும் ஏற்படவில்லை. சரிந்து விழுந்த பாலத்தின் பகுதியை அகற்றும் பணி நடந்து வருகிறது. விபத்து குறித்து ரெயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது" இவ்வாறு தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
இதற்கிடையே வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் பணிகள் வேகமாக முடிந்து திறக்கப்பட்டால் மட்டுமே கிண்டி முதல் செங்கல்பட்டு வரை உள்ள பல லட்சம் மக்களுக்கு மிகப்பெரிய நன்மையாக இருக்கும். பல்வேறு ஐடி நிறுவனங்கள், கார்ப்பரேட் வேளச்சேரி, ஓஎம்ஆர் சாலைகளில் உள்ள நிலையில் , இந்த ரயில் பாதை நிறைவு பெற்றால் தாம்பரத்தில் இருந்து அடையாறு, மயிலாப்பூருக்கு எளிதாக போக முடியும். சென்னையில் வரைபடத்தையே அப்படியே மாற்றக்கூடிய திட்டமாக இருக்கும்.
சென்னையின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான திட்டமாக பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடம் இருக்கிறது. ஆனால் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக எப்போது தான் முடியும் என்கிற ஏக்கம் தான் இப்போது சென்னைவாசிகளுக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உருவாகும் முன் தொடங்கப்பட்டது பரங்கிமலை பறக்கும் ரயில் பாதை பணி. ஆனால் சென்னை மெட்ரோ ஆரம்பித்து 55 கிலோமீட்டருக்கு ரயில்கள் போகிறது. மெட்ரோ 2ம் கட்டமாக மௌண்ட் முதல் பூந்தமல்லி வரை விரைவில் ஓடிவிடும் போல.. ஆனாலும் அப்போது கூட பரங்கிமலை பறக்கும் ரயில் ஓடுமா என்று தான் தெரியவில்லை..
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications