Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேம்பால கட்டுமான பணி.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்! வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மெட்ரோ பணிகள், மற்றும் பாலம் கட்டுமான பணிகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதனை சரி செய்ய மாற்றுவழியில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நாளை மறுநாள் முதல் கோட்டூர்புரம் மத்திய கைலாஷ் சந்திப்பு ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து மாற்றப்படுகிறது.

வேலை வாய்ப்பு, தொழில் முதலீடு, மருத்துவம், கல்வி, சுற்றுலா என சென்னைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே அவர்களுக்கான போக்குவரத்து தேவையும் அதிகரித்திருக்கிறது. ஏற்கெனவே புறநகர் ரயில், மெட்ரோ, மாநகர பேருந்துகள் ஆகியவை இருந்தாலும் டாக்ஸி, சொந்த கார்கள் மற்றும் பைக்குகளின் பயன்பாடு கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது.

chennai traffic police

கடந்த 1981ல் சென்னையில் சுமார் 1.20 லட்சம் வாகனங்கள் இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது 2016ல் 4.75 லட்சமாகவும், 2017ல் 5.30 லட்சமாகவும், 2020ல் 6.35 லட்சமாகவும் உயர்ந்திருக்கிறது. இன்றய தேதியில் இந்த வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இத்தனை வாகனங்கள் சாலையில் செல்லும் போது எவ்வளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதை நினைத்து பாருங்கள்.

ஆனால் இந்த நெரிசலை சமாளிக்க பாலங்கள், புதிய சாலைகள் போன்றவற்றையும் மாநில அரசு அவ்வப்போது கட்டி வருகிறது. தவிர புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் சோகம் என்னவெனில், இந்த கட்டுமான பணிகளால்தான் போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகரித்திருக்கிறது. சென்னை தற்போது சந்தித்திருக்கும் பெரிய பிரச்னை இதுதான். எனவே மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு வருகின்றன.

நாளை மறுநாள் முதல் கோட்டூர்புரம் மத்திய கைலாஷ் சந்திப்பு ஓ.எம்.ஆர். சாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது,

"சென்னை கோட்டூர்புரம் மத்திய கைலாஷ் சந்திப்பு ஓ.எம்.ஆர் சாலையில் பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், மத்திய கைலாஷ் சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சோதனை ஓட்டம் அடிப்படையில் வரும் 22.12.2024 முதல் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் அமுல்படுத்தப்படும்.

1. அடையாறில் இருந்து கிண்டி நோக்கி வரும் வாகனங்கள் மத்திய கைலாஷ் சந்திப்பில் OMR சாலை நோக்கி திருப்பி விடப்படும். அந்த வாகலங்கள் 400 மீட்டர் தூரம் சென்று தரமணி CPT பாலிடெக்னிக் கல்லூரியின் முன்புறம் "U" திருப்பம் அனுமதிக்கப்பட்டு, மத்திய கைலாஷ் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடைய அனுமதிக்கப்படும்.

2. கிண்டியில் இருந்து அடையாறு மற்றும் ஓ.எம்.ஆர் நோக்கி வரும் வாகனங்கள் தற்போது போலவே எந்த மாற்றும் இல்லாமல் செல்லலாம். 3.ஓ.எம்.ஆர்-ல் இருந்து கிண்டி நோக்கி வரும் மாநகர பேருந்துகள் மத்திய கைலாஷ் கோயிலின் நியமிக்கப்பட்ட தனிப்பாதையில் அனுமதிக்கப்படும். பயணிகளை பின்புறத்தில் இறக்கிவிட இந்த போக்குவரத்து மாற்றமானது மத்திய கைலாஷ் சந்திப்பில் காத்திருப்பு நேரத்தை குறைப்பதோடு, சீரான போக்குவரத்தையும் ஏற்படுத்த வழிவகை செய்யும்" என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+