பங்களா வீட்டில்.. அக்கா - தங்கை சேர்ந்து செய்த காரியம்.. மிரண்டு போன சென்னை போலீஸ்!!
சென்னை: பங்களா வீட்டில் அக்கா - தங்கை இருவரும் சேர்ந்து செய்த காரியத்தை பார்த்து சென்னை போலீசார் மிரண்டு போய்விட்டனர்.. இருவரையும் மடக்கி பிடித்து தீவிர விசாரணையும் நடத்தி வருகிறார்கள்!
சென்னை, எழும்பூர், சுலைமான் சக்ரியா அவென்யூ, காசா மேஜர் ரோட்டில் வசித்து வருபவர் டாக்டர் கோகுல்தாஸ்.. இவர் பிரபலமான டாக்டர் ஆவார்.. ஒரு பெரிய பங்களா வீட்டில் குடியிருப்பவர்.. வயது 84 ஆகிறது!
பெரிய வீடு என்றாலும், கோகுல்தாஸும் அவரின் மனைவியும் மட்டும்தான் இங்கு தங்கியிருந்தனர். கோகுல்தாஸின் மகன் கல்யாண்குமார், ஒரு தொழிலதிபர்.. எழும்பூரில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 6,00,000 ரூபாயை பீரோவில் வைத்து கல்யாண்குமார் பூட்டி வைத்துள்ளார்... சில நாள்களுக்கு பிறகு பீரோவை திறந்து பார்த்தால், பணம் இல்லை.. அதனால், பெற்றோரிடம் பணம் குறித்து விசாரித்தார்.. அவர்கள் தங்களுக்கு தெரியாது என்று சொல்லிவிட்டனர்.

தங்க பிஸ்கட்
அதனால் அதிர்ச்சி அடைந்த கல்யாண்குமார், குடும்ப நகைகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தார்.. அப்போது, தங்க நகைகள், தங்க பிஸ்கட்கள் மாயமாகி இருந்ததை கண்டு மேலும் திடுக்கிட்டார்.. அதனால், உடனடியாக எழும்பூர் ஸ்டேஷனில் சென்ற வருடம் செப்டம்பர் மாதம் புகார் தந்தார்.. அதனடிப்படையில் போலீசாரும் இது சம்பந்தமான விசாரணையில் இறங்கினர்.. அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்தனர்... கல்யாண்குமாரின் பெற்றோரிடமும் விசாரித்தனர்.

பங்களா
அப்போது அவர்கள், நாங்கள் பகலில் தூங்கிவிடுகிறோம், எங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர்.. வயது, மூப்பு காரணமாக 2 பேரும் தூங்கியிருக்கலாம் என போலீசார் நினைத்து விட்டுவிட்டனர்.. அதன்பிறகு பங்களாவில் வேலை செய்வோரிடம் விசாரணை நடத்தப்பட்டது... சேத்துப்பட்டுவை சேர்ந்த லோகநாயகி 48, அவரின் தங்கை ஷாலினி, 34 இவர்களிடம் விசாரிக்கும்போது மாற்றி மாற்றி உளறினர்.

தம்பதி
கடைசியில், இருவரும்தான் நகை, பணத்தை திருடியதாக ஒப்புக் கொண்டனர். அக்கா - தங்கை 2 பேரும் சேர்ந்து கோகுல்தாஸ், அவரின் மனைவிக்கு பகலில் தூக்க மாத்திரையை பொடி செய்து, சாப்பாட்டில் தந்துள்ளனர்.. சாப்பிட்டதும் தம்பதி இருவரும் தூங்கி வந்துள்ளனர்... அந்த சமயத்தில், கள்ளச்சாவி போட்டு பீரோவை திறந்து இருவரும் வேலையை காட்டி உள்ளனர். இப்போது இவர்களிடம் ஒன்றரை கிலோ தங்க நகைகள், 8 தங்க பிஸ்கட்கள், லட்சக்கணக்கில் பணம், சொகுசு கார் போன்றவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

விசாரணை
இவற்றை எல்லாம் மொத்தமாக திருடாமல் கொஞ்சம் கொஞ்சமாக திருடி வந்துள்ளனர். வயதான தன் பெற்றோரை கவனிக்க இந்த அக்கா - தங்கையை கல்யாண்குமார்தான் 2 வருடத்துக்கு முன்பு வேலைக்கு சேர்த்துள்ளார்... சேலைக்குள் மறைத்து நகை, பணத்தை திருடி.. அதில் லோகநாயகியும் ஷாலினியும் சொகுசாக இதுநாள் வரை வாழ்ந்து வந்துள்ளனர்.. இப்போது வசமாக சிக்கி உள்ளதால், தீவிர விசாரணை நடக்கிறது.
-
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஒட்டுமொத்த ஊரே பார்க்க..பஸ் ஸ்டாண்டில் கணவன் செய்த செயல்! ஒரே நிமிடத்தில் எல்லாமே முடிஞ்சது! ஷாக் ! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம்












Click it and Unblock the Notifications