"CCTV".. வீட்டுக்கு வெளியே என்ன நடந்தது? ஜெயக்குமாரை ரகசிய ஸ்பாட்டுக்கு கூட்டி போய்! பரபர நிமிடங்கள்
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் நேற்று இரவு கைது செய்யப்பட்ட பின் என்ன நடந்தது என்பது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
திமுக நிர்வாகி ஒருவரை அடித்து, அரைநிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கூட்டி சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஜெயக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் சிலர் திமுக நிர்வாகியை அடித்து தாக்கிய இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் தற்போது 15 நாட்கள் நீதிமன்ற காவல் பெற்று சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

ஜெயக்குமார்
இதில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட போது அவர் வீட்டிற்குள் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்திருக்கிறார். அவர் சரியாக சாப்பிட்டு முடித்து கை கழுவும் நேரத்தில் போலீசார் பட்டினப்பாக்க வீட்டு கதவை தட்டி உள்ளனர். போலீஸ் வருவது ஜெயக்குமாருக்கு சில நிமிடங்களுக்கு முன் தெரிந்ததாக கூறப்படுகிறது. போலீஸ் வந்த போது வீட்டு கதவை முதலில் ஜெயக்குமார் தரப்பு திறக்கவில்லை. பின்னர் போலீசார் பலமாக வீட்டு கதவை தட்டி இருக்கின்றனர். 4-5 முறை கதவு தட்டப்பட்ட பின் போலீசாரை உள்ளே விட்டுள்ளனர்.

மனைவி ஜெயக்குமார்
அப்போது ஜெயக்குமார் - அவரின் மனைவி ஹாலில் அமர்ந்து இருந்தனர். சாப்பாடு தட்டுகள் அங்கேயே இருந்துள்ளது. அப்போது ஜெயக்குமாரை பிடித்து அழைத்து செல்ல போலீசார் முயன்று உள்ளனர். கிழக்கு மண்டல இணை ஆணையர் பிரபாகரன், மாதவரம் துணை ஆணையர் சுந்தரவனம் ஆகியோர் ஜெயக்குமார் கையை பிடிக்க முயன்று உள்ளனர். ஆனால் ஜெயக்குமார் தரப்பு.. அதெல்லாம் தொடாதீங்க.. சரியில்லை என்று கூறி உள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்கு வாதம் நடந்தது.

வீடியோ
இது வீடியோவாகவும் வெளியானது. ஜெயக்குமாரிடம் போலீசார்.. சரி உங்களை தொடவில்லை.. எங்களிடம் எப்ஐஆர் உள்ளது முறைப்படிதான் கைது செய்கிறோம். நீங்களே எங்களுடன் வாருங்கள் என்று கூறி கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். அவர் கைலி கட்டி இருக்கிறேன் மாற்றிவிடுகிறேன் என்று கூறி உள்ளார். ஆனால் போலீசார் அதற்கு அனுமதிக்கவில்லை. இதையடுத்து கைலியோடு போலீசார் அவரை அழைத்து சென்றனர். அவர் வீட்டை விட்டு வெளியே சென்ற போது அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் அனைத்து காட்சிகளும் பதிவானது.

சிசிடிவி
4 போலீசார் ஜெயக்குமாரை போலீசார் வாகனத்தில் ஏற்றினர். கைலியோடு ஜெயக்குமார் நடந்து சென்று போலீஸ் வாகனத்தில் ஏறினார். அப்போது அவரை சுற்றி 40க்கும் மேற்பட்ட போலீசார் மொத்தமாக குதித்து அவரின் வாகனத்திற்கு பாதுகாப்பு கொடுத்தனர். அந்த நேரத்தில் சில தொண்டர்கள் அங்கே குவிந்ததால் இந்த பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் சிலர் அந்த தெரு முடியும் வரை வாகனத்திற்கு பாதுகாப்பாக வந்தனர். இதையடுத்து போலீஸ் வாகனத்தை வேகமாக எடுத்துக்கொண்டு பறந்தனர்.

போலீஸ் ரகசிய ஸ்பாட்
திட்டப்படி ஜெயக்குமாரை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்குத்தான் கொண்டு செல்ல வேண்டும். இந்த தகவல் தெரிந்து அதிமுக தொண்டர்கள் அங்கு மொத்தமாக குவிந்தனர். அங்கு சாலை மறியல் செய்ய முயன்றனர். இது பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டது. ஆனால் போலீஸ் எதற்கும் தயாராகவே இருந்தது. அதனால் ஜெயக்குமாரை போலீசார் நுங்கம்பாக்கம் அழைத்து செல்லவில்லை. சென்னை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் ஜார்ஜ் டவுன் நீதிமன்ற 15வது நீதித்துறை நடுவர் முரளி கிருஷ்ண ஆனந்த் வீட்டில் ஆஜர்படுத்தும் முன் வேறு ஒரு இடத்திற்கு அழைத்து சென்றனர்.

வேறு ஒரு இடம்
வேறு ஒரு ரகசிய ஸ்பாட்டில் இரவு நேரத்தில் ஜெயக்குமாரை வைத்து உள்ளனர். பாதுகாப்பு கருதி இப்படி செய்யப்பட்டுள்ளது. அங்கு அவரிடம் சில மணி நேரங்கள் விசாரணை நடந்துள்ளது. அப்போது அவர் உடை மாற்றிக்கொள்ள அனுமதி கேட்டதாகவும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டால் உடை வாங்கிக்கொள்ள முடியும் என்று போலீசார் தரப்பு கூறியதாக தெரிகிறது. அங்கு சில மணி நேரங்கள் வைக்கப்பட்ட ஜெயக்குமார் பின்னர் மேஜிஸ்டிரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 15 நாட்கள் காவல் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள்












Click it and Unblock the Notifications