மன்சூர் அலிகான் விவகாரம்... போலீசிடம் இருந்து நடிகை திரிஷாவுக்கு பறந்துபோன முக்கிய கடிதம்! பின்னணி
சென்னை: நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மன்சூர் அலிகான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் திரிஷாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லியோ. இந்த படத்தில் திரிஷா, மன்சூர் அலிகான் உள்பட நடிகர், நடிகர்கள் நடித்துள்ளனர்.

திரைப்பட வாய்ப்பு இன்றி இருந்த மன்சூர் அலிகானுக்கு மீண்டும் லோகேஷ் கனகராஜ் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார். இந்நிலையில் தான் சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் அளித்த ஒரு பேட்டியில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
அதாவது "லியோ படத்தில் பெட்ரூம் காட்சி மிஸ் ஆகிவிட்டது. குஷ்பு, ரோஜாவை மெத்தையில் போட்டதுபோல் திரிஷாவை போட முடியவில்லை" என பொருள்படும்படி அவர் கூறியது பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியது. இதற்கு நடிகை திரிஷா கடும் கண்டனத்தை பதிவு செய்தார். அதோடு மன்சூர் அலிகான் உடன் இனி நடிக்கப்போவது இல்லை என அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகானுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்பட பல திரைப்பட நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் மன்னிப்பு கேட்கும்படி வலியுறுத்தினர். ஆனால் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரவில்லை. இதையடுத்து இந்த விவகாரம் தேசிய மகளிர் ஆணையம் வரை சென்றது. சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் சார்பில் சென்னை போலீசாருக்கு உத்தரவு வந்தது.
இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் நடிகர் மன்சூர் அலிகான் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 354 ஏ, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மன்சூர் அலிகானுக்கு சம்மன் அனுப்பிய போலீசார் அவரை நேரில் வரவழைத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே தான் தற்போது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறை சார்பில் நடிகை த்ரிஷாவுக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.
அதாவது மன்சூர் அலிகான் விவகாரத்தில் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு நடிகை திரிஷா அளிக்கும் விளக்கத்தை தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்பது பாயும் என கூறப்படுகிறது.
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதனையும் மன்சூர் அலிகான் சமீபத்திய பேட்டியில் மறுத்தார். அதாவது தான் மரணித்துவிடு என தான் கூறியது மன்னித்துவிடு என தவறாக பொருள் கொள்ளப்பட்டுள்ளதாக கூறி விவாதத்தை கிளப்பி இருந்தார். இந்நிலையில் தான் தற்போது திரிஷாவிடம் போலீசார் விளக்கம் கேட்டுள்ளனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications