சென்னை மக்களே நோட் பண்ணுங்க.. மே 31ல் பெருங்களத்தூர் + நந்தம்பாக்கம் உள்பட பல இடங்களில் மின்தடை
சென்னை: மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் பெருங்களத்தூர், முடிச்சூர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட ஏரியாக்களின் சில இடங்களில் நாளை மறுநாள் (மே 31)ம் தேதி சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்கும் நோக்கத்தில் மாதம் ஒருமுறை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி நடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்.
அந்த வகையில் சென்னையில் வரும் மே 31ம் தேதி சில இடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

சென்னையில் மே 31ம் தேதி (நாளை மறுநாள்) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக பெருங்களத்தூர், முடிச்சூர், நந்தம்பாக்கம், மாதம்பாக்கம் உள்ளிட்ட ஏரியாக்களில் உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது. மதியம் 2 மணிக்கு பராமரிப்பு பணி முடிவடைந்த பிறகு மீண்டும் மின் இணைப்பு வந்து விடும்.
பெருங்களத்தூர்: காந்தி நகர், கிருஷ்ணா ரோடு, முத்துவேளாளர் ரோடு, என்ஜிஓ காலனி, ஆர்எம்கே நகர், பாரதி நகர், காமாட்சி நகர், சேகர் நகர், கல்கி தெரு, டேவிட் நகர், ஜிஎஸ்டி ரோட்டின் ஒரு பகுதி (எரணியம்மன் கோவிலுக்கு பின்புறம்) ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
முடிச்சூர்: அமுதம் நகர், ஏஎன் காலனி, அஷ்டலட்சுமி நகர், சாஸ்திரி நகர், புவனேஸ்வரி நகர், ராயப்பா நகர், விஎம் கார்டன் உள்ளிட்ட இடங்களில் மின்சப்ளை இருக்காது.
நந்தம்பாக்கம்: மணப்பாக்கம் மற்றும் கோலப்பாக்கம் ரோடு, காசா கிராண்டா கஸ்டர் மற்றுமு் வுட்சைட், கிரிகோரி நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பெல் நகர், ஸ்ரீராம் கார்டன், மைக்ரோமார்வெல், தர்மராஜபுரம், பிபிசிஎல் பேஸ் I, II, வல்லிஸ்வரன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.
மாதம்பாக்கம்: படுவாஞ்சேரி, அகரம், அன்னை சத்யா நகர், வெல்கம் காலனி, பிள்ளையார் கோவில் தெரு, குறிஞ்சி நகர், சாய் பாலாஜி நகர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. இதனால் மேற்கூறிய இடங்களில் வசிக்கும் மக்கள் நாளை மறுநாள் காலை 9 மணிக்கே மின்சாதனங்களை வைத்து மேற்கொள்ள வேண்டிய பணிகளை முடித்து விடுவது நல்லது.
-
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications