எலி மருந்து நெடியால் சென்னையில் பலியான 2 குழந்தைகள்.. தனியார் நிறுவனத்துக்கு சீல்.. காரணம் இதுதான்
சென்னை: சென்னை குன்றத்தூரில் வங்கி மேலாளர் வீட்டில் எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எலி மருந்து வழங்கிய தனியார் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்து சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை குன்றத்தூரை அடுத்த மணஞ்சேரி பகுதியில் வசிப்பவர் கிரிதரன் (வயது 34). இவர் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவது மனைவி பெயர் பவித்ரா. இந்த தம்பதிக்கு விஷாலினி(6) மற்றும் சாய் சுதர்சன் (1) என இரு குழந்தைகள் இருந்தனர்.

இவரது வீட்டில் எலி தொல்லை அதிகம் இருந்துள்ளது. இதனால் எலி மருந்து வைக்க அவர் முடிவு செய்தார். இதுதொடர்பாக சென்னை தி நகரில் உள்ள பெஸ்ட் கண்ட்ரோல் எனும் தனியார் நிறுவனத்தை அவர் தொடர்பு கொண்டார்.
அதன்பிறகு கடந்த 13ம் தேதி அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வீட்டுக்கு சென்று எலி மருந்து வைத்தனர். அப்போது எலி மருந்தின் நெடி என்பது அதிகம் வந்துள்ளது. ஆனால் சிறிது நேரத்தில் எலி மருந்தின் நெடி குறைந்து விடும் என நினைத்து கிரிதரன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வீட்டில் கதவை பூட்டி தூங்கினார். அப்போது வீட்டு ஜன்னல், கதவுகள் என அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தது.
மறுநாள் காலை கிரிதரன் மனைவி பவித்ரா மற்றும் 2 குழந்தைகள் என அனைவரும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். குழந்தைகள் 2 பேரும் மயங்கினர். இதையடுத்து கிரிதரன் உள்பட நால்வரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு குழந்தைகள் விஷாலினி, சாய் சுதர்சன் ஆகியோர் பலியாகினர். கிரிதரன், பவித்ரா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபற்றி குன்றத்தூர் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது அதிக வீரியம் கொண்ட எலி மருந்து வைத்ததால் அதில் இருந்து வந்த நெடி தாங்க முடியாமல் குழந்தைகள் 2 பேரும் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் கைது செய்தனர். மேலும் சென்னை தி நகரில் செயல்பட்டு வந்த எலி மருந்து வைக்கும் Pest Control அலுவலகத்தின் உரிமம் நேற்று ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு 2 நாட்களில் சீல் வைக்கப்படும் என்று வேளாண் துறை அதிகாரிகள் அறிவித்தனர். அதன்படி இன்று தி நகரில் செயல்பட்டு வந்த பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்துக்கு வேளாண் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications