மொட்டை மாடிக்கு போன புஷ்பா.. பின்னாடியே வந்த டெய்லர்.. சென்னை ராமாபுரத்தில் இப்படி? பாவம் அந்த மகள்
சென்னை: சமூகத்தில் பாலியல் குற்றங்களும் வன்முறைச் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒட்டுமொத்த மனிதநேயத்திற்கும் விடுக்கப்பட்ட பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது... இத்தகைய கொடூரமான செயல்களைத் தடுத்து நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்... நேற்றுகூட சென்னை ராமாபுரத்தில் ஒரு கொடுமை நடந்துள்ளது பாருங்க...
சென்னை ராமாபுரம், செந்தமிழ் நகர் அனெக்ஸ் 2-வது தெருவில் வசித்து வருபவர் புஷ்பா.. 37 வயதாகிறது.. கடந்த சில வருடங்களாகவே தனது கணவருடன் புஷ்பாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.. இதன்காரணமாக, கடந்த 10 ஆண்டுகளாக அவரைப் பிரிந்து வசித்து வந்துள்ளார்.

சென்னை ராமாபுரம்
புஷ்பாவுக்கு 16 வயது மகள் உள்ளார்.. எனவே மகள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து அந்த வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், புஷ்பாவிற்கும் மதுரவாயல் ஸ்ரீதேவி குப்பத்தைச் சேர்ந்த டெய்லர் கார்த்திக் என்ற 34 வயது நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவரும் புஷ்பாவிற்கு உறவினர் முறைதான்.
இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியிருக்கிறது.. இதனால் கார்த்திக் அடிக்கடி புஷ்பாவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
அப்படித்தான் சம்பவம் நடந்த இரவு கார்த்திக் வழக்கம்போல புஷ்பாவின் வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று தனிமையில் பேசிக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
புஷ்பா மொட்டை மாடி
அப்போது அவர்களுக்கு இடையே ஏதோ ஒரு விஷயத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு, அது பெரிய தகராறாக மாறியுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கார்த்திக், புஷ்பாவை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் புஷ்பா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.. கொலையை செய்துவிட்டு கார்த்திக் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
மறுநாள் காலை புஷ்பாவின் மகள் மாடிக்கு சென்றுள்ளார்.. அப்போதுதான் தன்னுடைய அம்மா சடலமாகி கிடப்பதையும், முகம், கைகளில் பலத்த காயங்களுடன் ரத்தம் வழிந்த நிலையில் கிடப்பதையும் க்ணடு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார். அந்த சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ராமாபுரம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
புஷ்பா - விசாரணை
தகவலறிந்து வந்த போலீசார் புஷ்பாவின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், புஷ்பா அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த உறவினர் கார்த்திக்கை தீவிரமாக தேட துவங்கினர்.. தேடி வந்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார்,ருஅவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழே இறங்கி வராத அம்மா
சம்பவம் நடந்த இரவு புஷ்பாவின் மகள் தன்னுடைய அம்மாவும், கார்த்திக்கும் பேசிக்கொண்டிருப்பதை இரவு 11 மணி அளவில் மாடிக்கு வந்து பார்த்தாராம்.. அதன் பிறகு மகள் கீழே இறங்கி வந்து தூங்கிவிட்டாராம்.. நீண்ட நேரம் ஆகியும் அம்மா மாடியில் இருந்து கீழே வராததால், காலையில் மாடிக்குச் சென்று பார்த்துள்ளது தெரியவந்துள்ளது.
சென்னை ராமாபுரம் பகுதியில் இந்த கொலை பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது... அப்பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications