சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு "ஆப்பு".. ஐஐடி நிபுணர்கள் வர்றாங்களாமே.. ஹைகோர்ட் அதிரடி
சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கட்டப்பட்டிருக்கும், அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் குறித்து ஐஐடி நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ய கோரிய வழக்கில், தமிழக வீட்டு வசதி வாரியம் பதில் தருமாறு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த எஸ்.லீலா என்பவர், ஹைகோர்ட்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் உள்ளதாவது:

கார்பஸ் தொகை: "தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் அண்ணாமலைபுரத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டை ரூ.1.23 கோடிக்கு வாங்கினேன். கார்பஸ் தொகை என்று தனியாக ரூ. 50 ஆயிரமும் செலுத்திவிட்டேன். இந்த வீடு கடந்த ஜனவரி மாதம் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. பல லட்சம் செலவில் உள் அலங்கார வேலைகளை செய்திருக்கிறேன்.
ஆனால், ஒப்பந்தத்தில் கூறியபடி வர்ணம் பூசுதல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வேலைகளை வீட்டுவசதி வாரியம் செய்து கொடுக்கவில்லை. ஒப்பந்தப்படி பணிகளை செய்து தருமாறு கடந்த மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்தும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை.
குடியிருப்புகள்: என்னை போல் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை வாங்கியவர்களும் கொடுத்துள்ளனர். இதுபோன்ற பொறுப்பற்ற முறையில் செயல்படுவதால்தான வீட்டு வசதி வாரியம் அய்யனம்பாக்கம் சுற்றி கட்டியுள்ள 5 ஆயிரம் வீடுகள், சோழிங்கநல்லூரை சுற்றியுள்ள ஆயிரம் வீடுகள் கடந்த 2020ம் ஆண்டு முதல் விற்பனையாகாமல் உள்ளன.
இந்த வேலைகளை செய்து கொடுக்கும்படி வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குநர் மற்றும் செயற் பொறியாளரிடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுடன் கூட்டு சேர்ந்து, தங்களின் சுயலாபத்துக்காக செயல்படுவதால்தான் ஏற்கெனவே வீட்டுவசதி வாரியம் சார்பில் அயனம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்டுள்ள 5 ஆயிரம் வீடுகள், சோழிங்கநல்லூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் இன்னும் விற்பனையாகாமல் உள்ளன.
தரமற்ற பொருட்கள்: மேலும், தரமற்ற பொருட்களைக் கொண்டு இந்த அடுக்குமாடி வீடுகளை கட்டியிருப்பதால் இவற்றின் உறுதித்தன்மை மற்றும் தரப் பரிசோதனை தொடர்பாக, சென்னை ஐஐடி நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்.
அதிக பொருட்செலவில் இந்த வீட்டை வாங்கியும், தற்போது நிம்மதியில்லாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளேன். எனவே, இது தொடர்பாக நான் உட்பட, வீடு வாங்கிய பலர் அளித்துள்ள மனுவைப் பரிசீலிக்குமாறு வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குநர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.
ஒத்திவைப்பு: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இது தொடர்பாக தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குநர், செயற் பொறியாளர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜனவரி 24-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications