Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரண்டாவது மனைவி சமைத்த உணவை.. முதல் மனைவியிடம் தந்த கணவர்.. அடுத்த நொடியே ஆடிபோன சென்னை அரும்பாக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரண்டாவது மனைவி தயாரித்த சாப்பாட்டை, முதல் மனைவியிடம் நள்ளிரவு 2 மணிக்கு கொண்டுவந்து தந்து சாப்பிட சொல்லி அடம்பிடித்துள்ளார் போதை கணவர்.. கடைசியில் என்ன ஆனது தெரியுமா? சென்னையில் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.

சென்னை அரும்பாக்கம், பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திலீப் சிங்.. 50 வயதாகிறது.. இவர் செக்யூரிட்டி வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் பார்வதி.. 45 வயதாகிறது. துப்புரவு பணி செய்து வருகிறார். திலீப்புக்கு அதே பகுதியில் 2வது மனைவியும் இருக்கிறாராம்.

securityman arumbakkam

குடிப்பழக்கம்: குடிப்பழக்கத்திற்கு அடிமையான திலீப் சிங், தினமும் குடித்துவிட்டு வந்து குடிபோதையில் முதல் மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். அதேபோல இரண்டாவது மனைவி தொடர்பாகவும் குடும்பத்தில் அடிக்கடி தம்பதிக்குள் தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று விடிகாலை 2 மணிக்கு, குடிபோதையில் இருந்த திலீப், பார்வதியிடம் தகராறு செய்துள்ளார். அத்துடன், கிச்சனில் காய்கறி வெட்டும் கத்தியால், பார்வதியின் வயிற்றையும் லேசாக கிழித்துவிட்டார்.

இதில் பலத்த காயமடைந்த பார்வதி, உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.. அரும்பாக்கம் போலீசில் புகார் தந்ததையடுத்து, போலீசார், திலீப்பை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

துப்புரவு தொழிலாளி இதையடுத்து, திலீப் ஏன் பார்வதியை கத்தியால் குத்தினார் என்பது குறித்து, போலீசார் செய்திக்குறிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த செய்திக்குறிப்பில், "சென்னை அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் திலீப் சிங் என்பவரது மனைவி பார்வதி (45), தனியார் நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் திலீப் சிங்கிற்கு இரண்டாவது திருமணம் நடந்தது.

நேபாளத்தில் வசிக்கும் இரண்டாவது மனைவி கடந்த ஒரு வருடமாக பார்வதி வீட்டில் தனி அறையில் வசித்து வந்தனர். இதனால் பார்வதிக்கும் அவரது கணவர் திலீப் சிங்குக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை பார்வதியிடம் தனது இரண்டாவது மனைவி தயாரித்த உணவை சாப்பிடுமாறு திலீப் சிங் கூறியுள்ளார். பார்வதி சாப்பிட மறுத்தாள்.

securityman arumbakkam

வாக்குவாதம்: இதனால் ஆத்திரமடைந்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திலீப் சிங் கல் மற்றும் கத்தியால் பார்வதியை தாக்கினார். தாக்குதலில் காயமடைந்த பார்வதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மேற்கண்ட குற்றத்தில் ஈடுபட்ட திலீப்சிங் (50) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தி, கல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்" என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மனைவி தயாரித்த சாப்பாட்டை, நடுராத்திரி 2 மணிக்கு வந்து, முதல் மனைவியிடம் தந்து சாப்பிட சொல்லி அடம்பிடித்துள்ளார் போதை கணவர்.. இது ஒரு கொலையில் முயற்சியில் போய் முடிந்துள்ளது சென்னைவாசிகளை அதிர வைத்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+