சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெண் ஊழியருடன் உல்லாசம்.. நைசாக வீடியோ எடுத்து மிரட்டல்.. கணவருக்கும் அனுப்பிய கொடூரன் கைது

Google Oneindia Tamil News

சென்னை: இளம் பெண்ணை ஏமாற்றி ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு வீடியோ எடுத்து அதனை அவரது கணவருக்கு அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (28). இவர் கொளத்தூர் பகுதியில் ஆன்லைன் சர்வீஸ் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். அதில் ஒன்றரை வருடங்களாக 28 வயது இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார்.

அந்த பெண்ணின் கணவருக்கு சரியான வேலை இல்லாத காரணத்தினால் தொடர்ந்து வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த கடையின் உரிமையாளர் அருணாச்சலம் . அந்த பெண்ணிடம் சகஜமாக பேசி பழகியுள்ளார்.

ஆபாச வீடியோ.. அடிக்கடி உல்லாசம்.. திருமணம் செய்ய மறுக்கும் கணவரின் நண்பர் மீது பெண் புகார் ஆபாச வீடியோ.. அடிக்கடி உல்லாசம்.. திருமணம் செய்ய மறுக்கும் கணவரின் நண்பர் மீது பெண் புகார்

அருணாச்சலம்

அருணாச்சலம்

பின்னாட்களில் அந்த பெண்ணிடம் அருணாச்சலம், "உனது குடும்பத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ என்னை பார்த்துக் கொள்" என ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணுடன் பலமுறை உடலுறவு கொண்டதாக தெரிகிறது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அருணாச்சலத்தின் செக்ஸ் டார்ச்சர் தாங்காமல் அந்த பெண் அவரை விட்டு விலக ஆரம்பித்துள்ளார்.

 வேலைக்கு செல்லாத பெண்

வேலைக்கு செல்லாத பெண்

அதன்பிறகு வேலைக்கு செல்வதையும் நிறுத்தி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அருணாச்சலம், அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் போது எடுத்த வீடியோ மற்றும் போட்டோக்களை வைத்துக் கொண்டு அந்த பெண்ணை மிரட்டி மீண்டும் உடலுறவுக்கு அழைத்துள்ளார்.

பெண் மறுப்பு

பெண் மறுப்பு

ஒரு கட்டத்தில் அந்த பெண் மறுக்கவே அருணாச்சலம் அந்த பெண்ணின் கணவருக்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்துள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது குறித்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அருணாச்சலத்தை தேடி வந்தனர்.

 அருணாச்சலம் கைது

அருணாச்சலம் கைது

இந்நிலையில் நேற்று இரவு அருணாச்சலத்தை வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குடும்ப கஷ்டத்திற்காக வேலைக்கு வரும் பெண்களை இது போன்ற மிருகங்கள் வேட்டையாடுவது தொடர்கதையாகிவிட்டது. அது போல் பெண்களும் இது போன்ற காமூகன்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த இடம் இல்லாவிட்டால் இன்னொரு இடத்தில் வேலை. வேலைக்காக அருணாச்சலம் போன்ற கொடூரன்களை ஊககுவிக்கவே கூடாது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

English summary
Chennai shop owner threatens a woman worker with obscene video and sent it to her husband.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X