சென்னையில் அதிகரிக்கும் ஆக்டிவ் கேஸ்கள்.. உயிரிழப்புகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முக்கிய முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் படுக்கைகளுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழ்நாட்டில் 13,625 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அதேபோல தினசரி கொரோனா உயிரிழப்பும் 94 ஆகப் பதிவாகியுள்ளது. மாநிலத்தில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

குறிப்பாக, வைரஸ் பரவலின் தாக்கம் சென்னையில் மோசமாக உள்ளது. தற்போது சென்னையில் தினசரி வைரஸ் பாதிப்பு 4000ஐ கடந்துள்ளது. அதேபோல சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை ஏற்பட்ட போது, சென்னையில் உள்ள பள்ளி கல்லூரிகளில், அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலையிலும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை

மேலும், சென்னையில் ஆக்சிஜன் உதவி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகச் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே, இரண்டு கட்டடங்களில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது கூடுதல் கொரோனா படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கூடுதல் படுக்கைகள்

கூடுதல் படுக்கைகள்

கடந்த ஆண்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 800 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் உட்பட மொத்தம் 2000 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு இருந்தன. கொரோனா 2ஆம் அலையில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஏதுவாக புதிதாக 750 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் 500 ஆக்சிஜன் வசதி கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா சிறப்பு மருத்துவமனை

கொரோனா சிறப்பு மருத்துவமனை

இதன் மூலம் இப்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கை 1300ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கொரோனா படுக்கைகளின் எண்ணிக்கையும் 3250ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா உயிரிழப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+