சென்னையில் வேறலெவலில் வரப்போகும் 50 புதிய பூங்காக்கள், 15 விளையாட்டு மைதானங்கள்.. மாஸ் பிளான்
சென்னை: சென்னை மாநகரம் கூடுதலான பசுமையான நுரையீரலை பார்க்க போகுது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 50 பூங்காக்கள் மற்றும் 15 விளையாட்டு மைதானங்களை புதிதாக அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை கான்க்ரீட் காடுகளாக இருக்கிறது. எங்குமே புறா கூடுகள் தான் வீடுகள். மரங்களையோ பசுமையான பூங்காக்களையோ பார்ப்பதே கடினமாக உள்ளது. பூங்காக்களை செயற்கையாக உருவாக்கிதான் பசுமையான பகுதிகள் சென்னையில் ஏற்படுத்தப்படுகின்றன. தற்போதைய நிலையில் சென்னை மாநகரில் 786 பூங்காக்கள் உள்ளன.

இந்நிலையில் புதிய பூங்காக்கள் குறித்து சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் (பூங்காக்கள்) வி புவனேஷ்வரன் கூறுகையில், சென்னையில் புதிதாக 50 பூங்காக்கள் மற்றும் 15 விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த பூங்காக்கள் அனைத்தும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களுடன் பசுமையாக உருவாகப்போகிறது. இயற்கை தோட்டங்கள், மருத்துவ தாவரங்கள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் பிற பூங்காக்களில் உள்ள அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும்.
இதற்கான முன்மொழிவுகள் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கும். அவர் ஒப்புதல் அளித்தவுடன், டெண்டர் விடப்படும்.
கடந்த ஆண்டு, 150 புதிய பூங்காக்கள் அமைக்கும் பணியை, மாநகராட்சி துவக்கி, 37 பூங்காக்களின் பணிகள் முடிவடைந்தன . மீதமுள்ளவற்றில் பணிகள் நடந்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பல்வேறு கட்டப் பணிகளில் உள்ளன இன்னும் இரண்டு மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.
புதிய பூங்காக்கள் அமைப்பது மட்டுமின்றி, விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்தும், வசதிகள் குறைவாகவும் உள்ள பழைய பூங்காக்களை மாநகராட்சி சீரமைக்கும். மண்டலத்திலும் எடுக்கப்படும் முன்மொழிவுகளை அனுப்புமாறு மண்டல அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம்" இவ்வாறு பொறியாளர் புவனேஷ்வரன் கூறினார்.
சென்னை மாநகராட்சி 2021-22ல் ரூ.25 கோடியில் 28 பூங்காக்களும், 2022-23ல் ரூ.29 கோடியில் 84 பூங்காக்களும் சீரமைக்கப்பட்டுள்ளன. தோட்டங்கள், சிறிய தொட்டிகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளுடன் சுமார் 57 பூங்காக்கள் கடற்பாசி பூங்காக்களாக மாற்றப்படுகின்றன. அதே இரண்டு ஆண்டுகளில் 68 விளையாட்டு மைதானங்கள் ரூ.28 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
இதுபற்றி சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (பூங்காக்கள் மற்றும் கல்வித் துறை) சரண்யா அரி கூறுகையில், தற்போதுள்ள பூங்காக்களை பசுமையாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. புதிய பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் மற்றும் புதுப்பித்தல் ஆகியவை அமைச்சரின் அறிவிப்பின்படி உள்ளன. நாங்கள் விரிவான திட்ட அறிக்கைகளை உருவாக்கி வருகிறோம். திறந்தவெளி மற்றும் பசுமையான இடங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.
இதனிடையே மார்ச் மாதத்துடன் பராமரிப்புக்கான ஒப்பந்தங்கள் காலாவதியானதால், பூங்கா பராமரிப்பில் குடிமை அமைப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அடையாறில் உள்ள இந்திரா நகரில் உள்ள பூங்கா போன்ற பல பூங்காக்களில் கழிப்பறைகள் செயல்படவில்லை, பூங்காக்களை சுத்தம் செய்வது சீரமைப்பது போன்ற அடிப்படை பராமரிப்புகளும் செய்யப்படவில்லை என்று புகார் உள்ளது.
கே.கே.நகரில் வசிக்கும் ஆர்.செந்தில் என்பவர் கூறுகையில், பல பூங்காக்களில் சுத்தமான கழிப்பறைகள் மற்றும் சீரமைப்பு வசதிகள் இல்லை. புதிய பூங்காக்கள் அமைப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை. ஆனால், தற்போதுள்ள பூங்காக்களும் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும்," என்றார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து மாநகராட்சி பொறியாளர் புவனேஸ்வரன் கூறுகையில், தற்போது, 142 பூங்காக்கள் ஜி.சி.சி., 57 குடியிருப்பாளர்கள், கார்ப்பரேட் மற்றும் என்.ஜி.ஓ.க்கள் மற்றும் 584 தனியார் ஒப்பந்ததாரர்களால் பராமரிக்கப்படுகின்றன. பராமரிப்புக்காக டெண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம், விரைவில் இறுதி செய்யப்படும். பூங்கா பராமரிப்பு விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி செய்யப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றார்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications