சென்னையில் நாய் வளர்ப்போர் கவனத்திற்கு.. ரூ.5000 அபராதம் கட்ட வேண்டாம்! இதை செய்யுங்க!
சென்னை: நாய் கடி தொல்லை பெரும் பிரச்சனையாக வெடித்திருக்கும் நிலையில், இனி சென்னையில் நாய் வளர்ப்போர் அதற்கான உரிமம் பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. ஆனால் உரிமம் எளிதாக கிடைப்பதில்லை என்று நாய் வளர்ப்போர் குற்றம் சாட்டிய நிலையில், உரிமம் வழங்க இன்று 6 இடங்களில் மாநகராட்சி சிறப்பு முகாம்களை அமைத்திருக்கிறது.
தெருநாய் கடி பிரச்சனை ஒருபுறம் எனில், வளர்ப்பு நாய்களின் தொல்லை அதைவிட அதிகமாக இருக்கிறது. அர்ஜுன் ரெட்டி போன்ற படங்களை பார்த்துவிட்டும், இன்ஸ்டா ரீல்ஸில் நாய்களின் க்யூட்டான வீடியோக்களை பார்த்துவிட்டும், நாய்களை வாங்கி வளர்க்கும் போக்கு அதிகமாகவே இருக்கிறது.

அதுகூட பரவாயில்லை, நான்தான் பயங்கரமான நாயை வைத்திருக்கிறேன் என கெத்துக்காக நாய்களை வளர்ப்பது முற்றிலும் தவறானது என்றே விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். இப்படி ஆர்வக்கோளாறில் நாய்களை வாங்குபவர்கள் அதை எப்படி வளர்ப்பது என்று தெரியாமல், நாளடைவில் அதை சரியாக பராமரிக்காமல் விட்டுவிடுகின்றனர். இப்படி கவனிப்பு இல்லாமல் விட்டுவிடப்படும் வளர்ப்பு நாய்கள், காலை கடனை கழிப்பதற்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியில் அழைத்துச்செல்லப்படுகின்றனர்.
இவ்வாறு இறுக்கமான சூழலில் வளர்வதால் நாய்கள் தங்கள் கட்டுப்பாட்டை இழத்து வெறி பிடித்ததை போல மாறிவிடுகின்றன. அதன் வெளிப்பாடுதான் ஓனரை தாக்குவது, சிறார்களை தாக்குவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
எனவே இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க, இனி நாய்களை வளர்ப்போர் அதற்கான உரிமம் பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. வளர்ப்பு நாய்களை முறைப்படுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. நாய்களை வளர்ப்போர் தங்கள் முழு விவரங்களை செல்போன் செயலியில் பதிவிட்டு, வளர்ப்பு நாயின் புகைப்படத்தையும் பதிவேற்ற வேண்டும். இதற்கான கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும். ரேபிஸ் தடுப்பூசி ஆய்வுக்கு பின்னர், உரிமம் வழங்கப்படும். உரிமம் வழங்கப்படும்போது மைக்ரோ சிப் பொருத்தப்படும் என்று மாநகராட்சி அறிவித்திருந்தது.
உரிமம் பெற ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி நவ.24ம் தேதி முதல் உரிமம் பெறாமல் நாய் வளர்ப்போருக்கு ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும்.
இந்நிலையில் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்க சென்னையில் 6 இடங்களில் மாநகராட்சி சார்பில் இன்று சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. திரு.வி.க.நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கத்தில் முகாம்கள் இன்று அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த முகாம்களில் நாய்களுக்கு உரிமம் வழங்குவதுடன் மைக்ரோசிப் பொருத்தி தடுப்பூசி போடப்படும். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும்.
எனவே வளர்ப்பு நாய்களை வைத்திருப்போர் உடனடியாக இந்த முகாம்களில் பங்கேற்று தங்கள் நாய்களுக்கான உரிமத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் ரூ.5000 அபராதத்தை தவிர்க்க முடியும்.
-
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications