சென்னை டூ பரந்தூர் 15 நிமிடத்தில் போகலாம்.. வேற லெவலில் மாறப்போகுது போக்குவரத்து சிஸ்டம்? செம பிளான்
சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பரந்தூரில் புதிதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு 15 நிமிடத்தில் செல்லும் வகையில், ஹைப்பர் லூப் ரயில் சோதனை திட்டத்தை செயல்படுத்த சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் மற்றும் ஐஐடி குழுவினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சுமார் 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ரூ.32,704.92 கோடி ரூபாய் செலவில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் தற்போது மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது.

ஹைப்பர் லூப் ரயில்: சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால் போக்குவரத்து நெரிசலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்பட்டுத்தப்பட்டு வருகின்றன. சென்னை மீனம்பாக்கத்தில் தற்போது விமான நிலையம் உள்ள நிலையில், பரந்தூரிலும் ஒரு விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரந்தூர் விமான நிலையத்திற்கு பயணிகள் செல்லும் வகையில், பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை பரந்தூர் வரை நீட்டிக்கப்பட உள்ளது.
15 நிமிடத்தில் செல்லலாம்: இந்த நிலையில், சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் இருந்து பரந்தூர் விமான நிலையம் வரை ஹைப்பர் லூப் தொழில் நுட்பம் கொண்ட அதிவேக ரயில் இயக்குவதற்கான திட்டத்தை முன்னெடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடைபெற்றால் வரும் 2035 ஆம் ஆண்டிற்குள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பரந்தூர் விமான நிலையத்திற்கு வெறும் 15 நிமிடங்களில் சென்றுவிட முடியும்.
எப்படி சாத்தியம்?: இந்த ஹைப்பர் லூப் தொழில் நுட்பம் என்பது வெற்றிடமான ஒரு குழாய்க்குள் ரயில் போன்ற வாகனம் மின்னல் வேகத்தில் செல்லக்கூடியது ஆகும். குழாய்க்குள் ரயில் போன்ற வாகனம் இருக்கும். இதில் அமர்ந்து பயணிகள் பயணிப்பார்கள். காந்த அலைகள் மூலம் இந்த வாகனம் பயணிக்கும். ஒரே நேரத்தில் 40 பேர் இதில் பயணம் செய்யலாம். இந்த அதிவேக ஹைப்பர் லூப் டெக்னாலஜியை ரயிலை சாத்தியப்படுத்துவது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் மற்றும் சென்னை ஐஐடி குழுவினர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
விமானத்திற்கு இணையான வேகம்: அதுமட்டும் இன்றி சென்னை துறை முகம் மற்றும் அருகில் உள்ள முக்கிய தொழிற்பகுதிகளை இணைக்கும் விதமாக ஹைபர் லூப் தொழில்நுட்பம் கொண்ட ரயிலை இயக்குவது தொடர்பாகவும் பரிந்துரைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் விதமாகவும் இதை செயல்படுத்த ஆர்வம் காட்டுகிறார்களாம். குறைந்த அழுத்தக் குழாய்களில் காந்தத்தின் இழுக்கும் சக்தியைப் பயன்படுத்தி விமானம் போன்ற வேகத்தில் ரயில்களை இயக்கும் தொழில் நுட்பம் கொண்ட இந்த ஹைபர் லூப் ரயில், டிராக்குகள் எதுவும் தேவைப்படாது.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications