பல மணி நேரம் மிச்சம்.. ஜாலியா பறக்கலாம்! தஞ்சாவூர், நெய்வேலிக்கு அடுத்த மாதம் முதல் விமான சேவை!
சென்னை: தஞ்சாவூர், நெய்வேலியில் இருந்து சென்னைக்கு விமான சேவை அடுத்த மாதம் தொடங்கப்படும் என தனியார் விமான நிறுவனமான ஏர் டாக்ஸி அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் இருந்து சென்னை, பெங்களூருக்கு பயணிகள் விமான சேவை அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று தனியார் விமான நிறுவனமான ஏர் டாக்ஸி அறிவித்துள்ளது. சிறு நகரங்களை இணைக்கும் உதான் திட்டத்தின் கீழ் தஞ்சையில் இருந்து சென்னைக்கு முதற்கட்டமாக 20 இருக்கைகள் கொண்ட சிறு ரக விமான சேவை தொடங்கப்படுகிறது. அதேபோல, நெய்வேலியில் இருந்து சென்னைக்கும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

1990ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தஞ்சை - சென்னை விமான சேவை பின்னர் பயணிகள் வருகையின்றி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், அடுத்த மாதம் தஞ்சையில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்படுகிறது. ஓடுபாதை உட்பட அனைத்து அம்சங்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிகிறது. இந்த விமான சேவை மூலம் சாமானியர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயன் பெறலாம்.
இதேபோல, நெய்வேலியில் இருந்து சென்னைக்கும் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில், பழுப்பு நிலக்கரி சுரங்கம், அனல் மின் நிலையம் ஆகியவை உள்ளன. கடந்த 1987ஆம் ஆண்டு சென்னையில் இருந்து நெய்வேலிக்கு விமானம் விட வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடப்பட்டது. அதையடுத்து குட்டி ரக விமானங்களை விட அரசு ஒப்புதல் அளித்தது. அதற்காக நெய்வேலி டவுன்ஷிப் அருகில் தேசிய நெடுஞ்சாலையோரம் சுமார் 220 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து சென்னைக்கும், நெய்வேலிக்கும் இடையே கடந்த 1987ஆம் ஆண்டு சிறு ரக விமான போக்குவரத்து தொடங்கியது.
சென்னையில் இருந்து நெய்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் குட்டி விமானம் இயக்கப்பட்டது. சென்னையில் இருந்து நெய்வேலிக்கு வெறும் 45 நிமிட பயணம் என்பதால், வசதி படைத்த பலர் குட்டி விமானத்தில் பயணம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டினர். கார், பஸ் உள்ளிட்டவற்றில் பயணிப்பதை விட விமானத்தில் பயணிப்பதால் சுமார் 4 மணி நேரம் மிச்சமானது என்பதால் பலரும் ஆர்வம் காட்டினர்.

சென்னை - நெய்வேலி சிறு ரக விமானத்தில் 19 பேர் மட்டுமே பயணம் செய்யலாம். அப்போது ஒரு நபருக்கு கட்டணமாக 215 ரூபாய் வசூலிக்கப்பட்டது. ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த விமான போக்குவரத்து நாளடைவில் மக்கள் பயணிக்க ஆர்வம் காட்டாததாலும், வருமான இழப்பு ஏற்பட்டதாலும் குறுகிய காலத்திலேயே விமான சேவை நிறுத்தப்பட்டது.
பின்னர், கடந்த பல ஆண்டுகளாக நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து பணிபுரியும் நூற்றுக்கணக்கானோர், மீண்டும் விமான சேவையை தொடங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி குறைந்த கட்டணத்தில் ஏழை, எளிய மக்களும் விமான பயணம் மேற்கொள்ள, விமான போக்குவரத்து இணைப்பு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிட்டது.
இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நெய்வேலி, சேலம், ஓசூர் பகுதிகளில் இருந்து விமான சேவையை தொடங்க மத்திய அரசுடன், தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. அதன் அடிப்படையில் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமான தளம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புனரமைக்கப்பட்டது. மேலும் 1,200 மீட்டர் ஓடுதளம், சுற்றுச்சுவர், பயணிகள் காத்திருப்பு அறை உள்ளிட்ட கட்டுமான பணிகளும் நடைபெற்றது.
இந்தப் பணிகள் முடிவடைந்த பிறகும், விமான சேவை செயல்படுத்தப்படவில்லை. நெய்வேலி விமான நிலையம் ஓரிரு மாதங்களில் இயங்க தொடங்கும் என கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியிருந்தார். இந்நிலையில், உதான் திட்டத்தில் நெய்வேலியில் இருந்தும் சென்னைக்கு சிறு ரக விமானம் சேவை அடுத்த மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. என்எல்சியில் இருக்கும் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications