வேறொருவரை மாட்டிவிட நினைத்து சிக்கிய இளைஞர்! சென்னை போலீசின் ஒற்றை கேள்வி இதுதான்! இப்போ ட்ரெண்ட்
சென்னை: சென்னை முகப்பேரில் புல்லட் பைக்கில் விதிமீறிய நம்பர் பிளேட்டுடன் ஒருவர் சென்றதாக அதனை போட்டோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு நடவடிக்கை கோரிய நபருக்கு சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் பதில் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த நபர் போலீஸ் கேள்விக்கும் சளைக்காமல் பதிலளித்து அசத்திய நிலையில் இந்த பதிவு கவனத்தை ஈர்த்தது.
சென்னை நகரில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருவதோடு, வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க போலீசார் சிறப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இதுதவிர சாலைகளில் போக்குவரத்து வாகனங்களை மீறுவோர் பற்றி சமூக வலைதளங்கள் மூலம் சென்னை மாநகர போலீசாரிடம் பலரும் புகார் அளித்து வருகின்றனர். இந்த புகார்களின் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்து விதிமீறுவோருக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் Dhineash (தினேஷ்) என்ற ட்விட்டர் பயனாளர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ராயல் என்பீல்ட் பைக்கை 2 ஆங்கிளில் போட்டோ எடுத்து பதிவிட்டார். அதில் வாகன பதிவெண் மிகவும் தெளிவாக தெரிகிறது. இந்த பதிவில், ‛‛இது உண்மையில் அனுமதிக்கப்படுகிறதா? இடம் முகப்பேர் கிழக்கு பாரி ஸ்ரீட்'' என எழுதி சென்னை போக்குவரத்து போலீசாரை டேக் செய்திருந்தார். அதாவது மோட்டார் சைக்கிளில் பதிவெண் பலகை விதிகள் படி எழுதவில்லை என்பதை தான் அவர் அப்படி கூறி இருந்தார்.
இந்த பதிவுக்கு உடனடியாக சென்னை போக்குவரத்து போலீசார் ‛ரெஸ்பான்ஸ்' செய்தனர். தான் போட்டோ எடுத்து போட்ட ராயல்ட் என்பீல்டு மீது நடவடிக்கை எடுத்ததாக கூறுவார்கள் என நினைத்தபோது தான் போலீசார் ட்விஸ்ட் வைத்தனர். அதாவது புகார் அளித்த நபரை, ‛‛தினேஷ், நீங்கள் வாகனம் ஓட்டியபோது செல்போன் பயன்படுத்தினீர்களா?'' என கேள்வி கேட்டனர்.
இதற்கு புகாரளித்த நபர், ‛இன்னும் தெளிவுபடுத்தும் நோக்கத்தில் படம் ஜூம் செய்யப்பட்டது. 2வது படத்தில் எனது டீசர்ட்டை படத்தின் கீழ் பகுதியில் காணலாம். மேலும் இந்த போட்டோ பில்லியன் ரைடர்(பின்இருக்கையில் அமர்பவர்) மூலம் எடுக்கப்பட்டது'' என்றார். இதையடுத்து சென்னை போக்குவரத்து போலீசார், ‛‛உங்களின் விளக்கத்துக்கு நன்றி. இது விதிமீறிய நம்பர் பிளேட்'' என குறிப்பிட்டனர்.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications