உல்லாசத்துக்கு அழைத்த பெண்.. விழுந்தடித்து சென்னை வடபழனிக்கு ஓடிய இளைஞர்.. அங்கே பார்த்தால் "4 பேர்"
சென்னை: இளைஞர் ஒருவரை இளம்பெண் ஒருவர் உல்லாசத்துக்கு அழைத்தாராம்.. இந்த இளைஞரும் சென்றிருக்கிறார்.. என்னாச்சு தெரியுமா?
அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் விஜய் தாபா.. 20 வயதாகிறது.. இவர் பிழைப்புக்காக சென்னை வந்துள்ளார்.. பூந்தமல்லி அடுத்துள்ள செம்பரம்பாக்கம் பகுதியிலேயே தங்கி, அங்கிருக்கும் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

செல்போன்: இவருக்கு செல்போன் ஆப் மூலம் இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பெண் சென்னை வடபழனியில் இருக்கிறாராம். இந்நிலையில், விஜய் தாபாவை அந்த பெண் உல்லாசத்திற்கு அழைத்ததாக தெரிகிறது.
இதைக்கேட்டு திக்குமுக்காடிப்போன விஜய், உடனே வடபழனிக்கு கிளம்பியிருக்கிறார்.. கங்கை அம்மன் காலனியில் உள்ள அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றிருக்கிறார் விஜய். அப்பெண்ணுடன் உல்லாசமாகவும் இருந்திருக்கிறார்.. ஆனால், இதற்காக பேசிய பணத்தை விட கூடுதலாக தரும்படி இளம்பெண் கேட்டாராம்.
அதிர்ச்சி: இதைக்கேட்டதும் விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளார்.. இதுவே 2பேருக்கும் வாக்குவாதமாக வெடித்துள்ளது.. அப்போது அந்த வீட்டின் இன்னொரு ரூமில், அதுவரை பதுங்கியிருந்த திருநங்கை ஒருவர் திடீரென வெளியே வந்தார்.. அவருடன் சேர்ந்து மேலும் 2 பேர் வெளியே வந்தனர்.. இப்போது இளம்பெண்ணுடன் சேர்ந்து மொத்தம் 4 பேர் இளைஞரை ரவுண்டு கட்டினார்கள்..
அங்கிருந்த பீர் பாட்டிலை கீழே உடைத்து, குத்தி கொலை செய்து விடுவதாக விஜய் தாபாவை மிரட்டியிருக்கிறார்கள்.. அத்துடன், விஜய் பாக்கெட்டிலிருந்த ரூ.12 ஆயிரத்தையும் பறித்து விட்டு மிரட்டி வெளியே அனுப்பியிருக்கிறார்கள்..
செல்போன்: உயிர் தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து விழுந்தடித்து கொண்டு வெளியே ஓடிவந்தார் விஜய்.. ஆனால், மீண்டும் அந்த கும்பலிடமிருந்து போன் வந்தது.. அதைத்தொடர்ந்து மிரட்டலும் வந்தது.
இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை விஜய் செல்போனுக்கு அனுப்பி வைத்த அந்த கும்பல், சோஷியல் மீடியாவில் வெளியிட்டு விடுவதாக சொல்லி, மீண்டும் பணம் கேட்டுள்ளது..
புகார்: இப்படியே பணம் கேட்டு அடிக்கடி மிரட்டி வந்த நிலையில், வேறு வழியில்லாமல், விஜய்தாபா போலீசுக்கு போனார்.. இந்த புகாரின்பேரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய அப்ரின் பர்கானா(21), அஸ்விதா என்ற முஸ்தபா (26) என்ற திருநங்கை மற்றும் தினேஷ்குமார் (25), பரத்குமார் (24) ஆகிய 4 பேரையுமே கைது செய்துள்ளனர்.. அவர்களிடம் இப்போது விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது..!!!
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications