பசி கொடுமை.. மாஸ்க்கை விழுங்கி துடிதுடித்த நாய்.. ஆபரேஷன் செய்து உயிரை காப்பாற்றிய சென்னை டாக்டர்கள்
மாஸ்க்கை விழுங்கிய நாயை டாக்டர்கள் போராடி காப்பாற்றினர்
சென்னை: மாஸ்க்கை விழுங்கிய நாய் ஒன்று உயிருக்கு போராடிய சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.. இதையடுத்து, டாக்டர்கள் ஆபரேஷன் செய்து நாயை காப்பாற்றிய மனிதநேய செயலும் அரங்கேறியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பரவலை கட்டுப்படுத்த மாஸ்க் அணிவதை கட்டாயம் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
மாஸ்க் அணிவதால், தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கப்படுகிறது.. அதனால், மக்களும் மாஸ்க் அணிவதன் அவசியத்தை உணர்ந்து செயல்பட்டு வருகின்றனர்..

மாஸ்க்
எனினும், தாங்கள் பயன்படுத்தப்பட்ட மாஸ்க்கை முறையாக அப்புறப்படுத்தாமல் தெருக்களில், ரோடுகளில் தூக்கி வீசி எறிந்துவிடுகின்றனர். இப்படி வீசிவிடுவதால், அந்த மாஸ்க்கில் இருக்கும் தொற்று, மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.. இதில் பல நேரங்களில் சிக்கி கொள்வது கால்நடைகள்தான்..

சாப்பாடு
தற்போது லாக்டவுன் என்பதால், மக்கள் வேலைகளுக்கு போக முடியாமல் உள்ளனர்.. இதனால் யார் கையிலும் காசு இல்லை.. சாப்பிடவும் வழியின்றி பலர் உள்ளனர்.. இப்படிப்பட்ட சூழலில், கால்நடைகளுக்கும் சாப்பாடு கிடைப்பதில்லை.. அந்த வகையில் ஒரு நாய் பசியால் இரை தேடி வந்துள்ளது.. அங்கிருந்த மாஸ்க்கை உணவென்று நினைத்து விழுங்கிவிட்டது..

மருத்துவர்கள்
அந்த சைபேரியன் ஹஸ்கி வகையை சேர்ந்தது என்கிறார்கள்.. மாஸ்க் வயிற்றுக்குள் சென்றதும் உயிருக்கு போராடி உள்ளது.. இதை பார்த்த சிலர், எதற்காக நாய் வலியால் துடிக்கிறது என்று தெரியாமல், உடனடியாக கால்நடை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போதுதான் அந்த நாய் வயிற்றில் மாஸ்க் இருப்பது தெரியவந்தது.

ஆபரேஷன்
இதை தொடர்ந்து நாயின் வயிற்றில் இருந்த மாஸ்க்கை ஆபரேஷன் செய்து எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர்.. அதனால், நாய்க்கு மயக்க ஊசி செலுத்தி, வயிற்றிலிருந்து மாஸ்க்கையும் ஆபரேஷன் செய்து அகற்றினர். இப்போது நாய் நலமுடன் உள்ளது... ஆனால் மக்கள் தான் மாற வேண்டி உள்ளது.. உபயோகித்த மாஸ்க்கை சாலையோரம் வீசாமல், குப்பை தொட்டியில் போடும் பழக்கத்தை இனியாவது தொடங்க வேண்டும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications