களத்தில் 2000 பேர்.. சென்னையில் “ஃபுல் போர்சில்” குடிநீர் வாரியம்! இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க
சென்னை: சென்னையில் மழை நீர் அகற்றும் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 57 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 180 ஜெட்ராடிங் வாகனங்கள் 2000 களப்பணியாளர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை குடிநீர் வாரிய இயக்குநர் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது, "சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 57 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 180 ஜெட்ராடிங் வாகனங்கள் மூலம் மழைநீர் அகற்றும் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் 2000 களப்பணியாளர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மழை பெய்து வருவதை முன்னிட்டு சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 57 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள் மற்றும் 180 ஜெட்ராடிங் வாகனங்கள் மூலம் மழைநீர் அகற்றும் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் 2000 களப்பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 327 கழிவு நீர் உந்து நிலையங்களும் எவ்வித தடையுமின்றி செயல்பட்டு வருகிறது.
சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவகத்தில் செயல்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் கட்டுபாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. பொது மக்கள் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் தொடர்பான புகார்களை 044-4567 4567 (20 Lines), 1916 (கட்டணமில்ல தொலைபேசி எண்) மூலம் தெரிவிக்கலாம்." என்று தெரிவித்து இருக்கிறார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று காலையில் இருந்தே மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு பெய்த பெருமழையினால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. முக்கிய சாலைகளில் மழை நீரில் ஊர்ந்தபடியே வாகனங்கள் சென்றன. சுரங்கப் பாதைகளுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
அதே நேரம் சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம், நெடுஞ்சாலைத் துறை இணைந்து மேற்கொண்ட மீட்புப் பணிகளின் காரணமாக பல இடங்களில் தேங்கிய மழை நீர் உடனடியாக வடிந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ள நிலையில் அவற்றை அகற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை பாதிப்பு தொடர்பாக 1913 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு புகாரளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
-
"எனக்கும் மரணம் வரும்.. என்னைப் புதைத்தாலும் எனது திட்டங்களைப் புதைக்க முடியாது” - முதல்வர் ஸ்டாலின் -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
கோவை தெற்கில் படையெடுக்கும் கரூர் டீம்.. திணறடிக்கும் செந்தில் பாலாஜி.. அலறும் அதிமுக -
159 வேட்புமனுக்கள் வாபஸ்.. இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் இறுதி வேட்பாளர் பட்டியல்! -
'இல்லத்தரசி' கூப்பன்.. ரெடியாகும் QR கோடு அஸ்திரம்.. ஸ்டாலின் கையில் எடுக்கும்.. பிரம்மாண்ட பிளான்! -
செல்வந்தர் அதிமுக வேட்பாளர் ₹1000 கோடி.. தமிழக அமைச்சர்களின் மனைவியர் பெயரில் சொத்து மதிப்பு பாருங்க -
புதுச்சேரியில் புது ரெக்கார்டு! வரலாறு படைத்த வாக்காளர்கள்.. வாக்கு சதவிகித்தை பாருங்க! -
தோல்வி பயம்.. அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் அதுதான்.. விளாசிய கனிமொழி! -
11% வாக்கு வித்தியாசம்.. திமுக 200+ கண்டிப்பாக வரும்! சர்வே சொல்லும் ரகசிய தகவல்.. கவனிச்சீங்களா! -
Low Pressure Trough: நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பாதை.. 15-ம் தேதி வரை மழை விடாது! சென்னையில் இன்று மழை வெளுக்கும் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
திமுக கூட்டணிக்கு முக்கிய இயக்கம் ஆதரவு.. தேவேந்திர குல வேளாளர் ஓட்டுகளை அள்ளலாம்! யாருனு பாருங்க












Click it and Unblock the Notifications