களத்தில் 2000 பேர்.. சென்னையில் “ஃபுல் போர்சில்” குடிநீர் வாரியம்! இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க
சென்னை: சென்னையில் மழை நீர் அகற்றும் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 57 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 180 ஜெட்ராடிங் வாகனங்கள் 2000 களப்பணியாளர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை குடிநீர் வாரிய இயக்குநர் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது, "சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 57 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 180 ஜெட்ராடிங் வாகனங்கள் மூலம் மழைநீர் அகற்றும் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் 2000 களப்பணியாளர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மழை பெய்து வருவதை முன்னிட்டு சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 57 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள் மற்றும் 180 ஜெட்ராடிங் வாகனங்கள் மூலம் மழைநீர் அகற்றும் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் 2000 களப்பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 327 கழிவு நீர் உந்து நிலையங்களும் எவ்வித தடையுமின்றி செயல்பட்டு வருகிறது.
சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவகத்தில் செயல்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் கட்டுபாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. பொது மக்கள் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் தொடர்பான புகார்களை 044-4567 4567 (20 Lines), 1916 (கட்டணமில்ல தொலைபேசி எண்) மூலம் தெரிவிக்கலாம்." என்று தெரிவித்து இருக்கிறார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று காலையில் இருந்தே மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு பெய்த பெருமழையினால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. முக்கிய சாலைகளில் மழை நீரில் ஊர்ந்தபடியே வாகனங்கள் சென்றன. சுரங்கப் பாதைகளுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
அதே நேரம் சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம், நெடுஞ்சாலைத் துறை இணைந்து மேற்கொண்ட மீட்புப் பணிகளின் காரணமாக பல இடங்களில் தேங்கிய மழை நீர் உடனடியாக வடிந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ள நிலையில் அவற்றை அகற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை பாதிப்பு தொடர்பாக 1913 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு புகாரளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications