நீயின்றி நானில்லை.. கணவன் இறந்த துக்கத்தில் மரணித்த மனைவி.. கலங்க வைக்கும் சம்பவம்
செங்கல்பட்டு: சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உடனடியாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
80 வயதான ராமலிங்கம் என்பவர் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு 70 வயதில் பானுமதி என்ற மனைவியும் தத்தெடுப்பு மகன் ஜெயராமன் ஆகியோர் உள்ளனர்.

கணவர் மரணம்
இவர்களுக்கு குழந்தைபாக்கியம் இல்லாத காரணத்தினால் தம்பி மகனை தத்தெடுத்து தன் மகன் போல் பாவித்து வளர்த்து வந்தனர். தற்போது 35 வயதை எட்டியுள்ள ஜெயராமன் இருவரையும் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் வயோதிகம் மற்றும் முடக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்டார் முதியவர் ராமலிங்கம். கடந்த 6 ஆண்டுகாலமாக படுத்த படுக்கையான ராமலிங்கத்திற்கு எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் சிகிச்சை ஒத்துழைக்கவில்லை. இந்நிலையில் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்த ராமலிங்கம் கடந்த ஞாயிறன்று இந்த உலகத்தை விட்டு மறைந்தார். இதையடுத்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த உறவினர்கள் திரண்டனர்.

மனைவி மரணம்
ஆனால் ராமலிங்கத்தின் மனைவி பானுமதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உயிருக்கு உயிராக நேசித்த கணவரின் பிரிவு அவரை அழக்கூட விடாமல் துக்கம் தொண்டையை அடைத்தது. நீண்ட நேரம் விரக்தியில் இருந்த பானுமதி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பானுமதி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மகன் ஜெயராமன் உள்ளிட்ட உறவினர்கள் கதறி அழுதனர்.

இறுதிச் சடங்கு
பின்னர் தம்பதியின் உடலுக்கு உரிய மரியாதை செய்து இறுதிச் சடங்குகள் செய்தார் மகன் ஜெயராமன். ஒரே சமயத்தில் கணவனும், மனைவியும் இறந்தது உறவினர்களிடையே பெரும் சோகத்தையும், இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கிராம மக்கள் சோகம்
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் கணவன் மனைவி இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்றும் அவர்கள் சண்டை, சச்சரவு செய்து ஒருநாள் கூட பார்த்தது இல்லை என்றும் தெரிவித்தனர். குடும்பநல நீதிமன்றத்திற்கு விவாகரத்தை கேட்டு செல்லும் தம்பதிகள் லைனில் நிற்கும் சமூகத்தில்தான் இதுபோன்ற பொக்கிஷங்களும் வாழ்ந்து மறைகின்றனர் என்றால் அது மிகையல்ல.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications