Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீயின்றி நானில்லை.. கணவன் இறந்த துக்கத்தில் மரணித்த மனைவி.. கலங்க வைக்கும் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உடனடியாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

80 வயதான ராமலிங்கம் என்பவர் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு 70 வயதில் பானுமதி என்ற மனைவியும் தத்தெடுப்பு மகன் ஜெயராமன் ஆகியோர் உள்ளனர்.

கணவர் மரணம்

கணவர் மரணம்

இவர்களுக்கு குழந்தைபாக்கியம் இல்லாத காரணத்தினால் தம்பி மகனை தத்தெடுத்து தன் மகன் போல் பாவித்து வளர்த்து வந்தனர். தற்போது 35 வயதை எட்டியுள்ள ஜெயராமன் இருவரையும் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் வயோதிகம் மற்றும் முடக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்டார் முதியவர் ராமலிங்கம். கடந்த 6 ஆண்டுகாலமாக படுத்த படுக்கையான ராமலிங்கத்திற்கு எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் சிகிச்சை ஒத்துழைக்கவில்லை. இந்நிலையில் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்த ராமலிங்கம் கடந்த ஞாயிறன்று இந்த உலகத்தை விட்டு மறைந்தார். இதையடுத்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த உறவினர்கள் திரண்டனர்.

மனைவி மரணம்

மனைவி மரணம்

ஆனால் ராமலிங்கத்தின் மனைவி பானுமதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உயிருக்கு உயிராக நேசித்த கணவரின் பிரிவு அவரை அழக்கூட விடாமல் துக்கம் தொண்டையை அடைத்தது. நீண்ட நேரம் விரக்தியில் இருந்த பானுமதி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பானுமதி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மகன் ஜெயராமன் உள்ளிட்ட உறவினர்கள் கதறி அழுதனர்.

இறுதிச் சடங்கு

இறுதிச் சடங்கு

பின்னர் தம்பதியின் உடலுக்கு உரிய மரியாதை செய்து இறுதிச் சடங்குகள் செய்தார் மகன் ஜெயராமன். ஒரே சமயத்தில் கணவனும், மனைவியும் இறந்தது உறவினர்களிடையே பெரும் சோகத்தையும், இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கிராம மக்கள் சோகம்

கிராம மக்கள் சோகம்

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் கணவன் மனைவி இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்றும் அவர்கள் சண்டை, சச்சரவு செய்து ஒருநாள் கூட பார்த்தது இல்லை என்றும் தெரிவித்தனர். குடும்பநல நீதிமன்றத்திற்கு விவாகரத்தை கேட்டு செல்லும் தம்பதிகள் லைனில் நிற்கும் சமூகத்தில்தான் இதுபோன்ற பொக்கிஷங்களும் வாழ்ந்து மறைகின்றனர் என்றால் அது மிகையல்ல.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+