அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னை: வேலூரில் அதிகபட்சமாக 17 செ.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான வட மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று மதியம் அளித்த பேட்டியில் கூறியதாவது: வளிமண்டல மேல் அடுக்கில் காணப்படும் காற்றின் சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக வேலூரில் 17 சென்டி மீட்டரும், கடலூரில் 13 சென்டி மீட்டரும், அரியலூரில் 12 சென்டிமீட்டர், திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 11 சென்டிமீட்டர், விழுப்புரத்தில் 10 சென்டிமீட்டர், சென்னையில் 2 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 24 மணிநேரத்திற்கு மிதமான மழை தொடரும்.
மீனவர்களுக்கு தனிப்பட்ட எச்சரிக்கை எதுவும் கிடையாது. அந்தமான் கடல் பகுதியில் தான் காற்றின் வேகம் இருக்கிறது. எனவே மீனவர்கள் மீன்பிடிக்க எந்த தடையும் இல்லை.
அவலாஞ்சியில் ஒரே நாளில் 91 செ.மீ மழை பெய்தது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது. உறுதி செய்த பிறகு அது தொடர்பாக நாங்கள் கருத்து தெரிவிப்போம்.
நீலகிரியில் தற்போது கன மழை இல்லை. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை அளவு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications