சென்னையில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியாக்கள் தெரியுமா? நோட் பண்ணுங்க மக்களே
சென்னை: சென்னையில் ஆவடி, மயிலாப்பூர், சோழவரம் உள்ளிட்ட ஏரியாக்களில் நாளை (மே 23)ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
சென்னை உள்பட மாநிலம் முழுவதும் மாதாந்திர பாராமரிப்பு பணிகளுக்காக ஏதேனும் ஒரு நாள் மின்சாரம் தடை செய்யப்படும். அன்றைய தினம் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு மக்களுக்கு பிரச்சனையின்றி மின்சப்ளை என்பது வழங்கப்படும்.

அந்த வகையில் சென்னையில் நாளை (மே 23) சில இடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மின்சாரம் தடைப்படும் இடங்களின் விபரம் வருமாறு:
சென்னையில் நாளை (மே 23)ம் தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக சோழவரம், ஆவடி மற்றும் மயிலாப்பூரில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது. மதியம் 2 மணிக்கு பிறகு மின்சப்ளை மீண்டும் சீராக வழங்கப்படும்.
ஏரியா வாரியாக பார்த்தால் சோழவரத்தை எடுத்து கொண்டால் சோத்துபெரும்பேட்டின் ஒருபகுதி, காரனோடை, ஒரக்காடு ரோடு, கோட்டைமேடு பெரிய காலனி, செம்புலிவரம் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. அதேபோல் மியலாப்பூரை எடுத்து கொண்டால் சாந்தோம் ஹைரோடு, டோமிங் குப்பம், டோமிங் லைன், முல்லையம்மா நகர், சீனிவாசபுரம், கிழக்கு சர்க்கிள் ரோடு, மதாக்ஸ் சர்ச் ரோடு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
அதேபோல் லாசர் சர்ச், ரோசரி சர்ச் ரோடு, முத்து தெரு, அப்பு தெரு, சையத் வாஹன் உசேன் தெரு, எம்எம்கே தெரு, கச்சேரி ரோடு, நொச்சிக்குப்பம், பாபநாசம் சாலை, பஜார் ரோடு கன்னிலா தெரு, தேவதி தெரு, நடுதெரு,சாலை தெரு, சித்ரகுளம் வடக்கு, தச்சு அருணாச்சலம் தெரு, ஆபிரகாம் தெரு, விசி கார்டன், ஆர்கே முத்து ரோடு, சோலையப்பம்ன் தெரு, மந்தவெளி 5வது கிராஸ் ரேடு, வடக்கு மற்றும் கிழக்கு மாதா தெரு, நல்லப்பன் தெரு, ஆதம் தெரு, குமரகுரு தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
ஆவடி ஏரியாவை எடுத்து கொண்டால் மைதானமல்லி பாடசாலை தெரு, அம்பேத்கர் தெரு, எம்சி ராஜா தெரு, வள்ளூவர் தெரு, ராஜீவ் காந்தி நகர் 1வது முதல் 8 வது தெரு, பிருந்தாவன்நகர் 1வது முதல் 5வது தெரு, ஐஜிபி, சிஆர்பிஎப், காரிசன் இன்ஜினியரிங் ஐஏஎஃப் உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சப்ளை என்பது இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications