சென்னையில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியாக்கள் தெரியுமா? நோட் பண்ணுங்க மக்களே
சென்னை: சென்னையில் ஆவடி, மயிலாப்பூர், சோழவரம் உள்ளிட்ட ஏரியாக்களில் நாளை (மே 23)ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
சென்னை உள்பட மாநிலம் முழுவதும் மாதாந்திர பாராமரிப்பு பணிகளுக்காக ஏதேனும் ஒரு நாள் மின்சாரம் தடை செய்யப்படும். அன்றைய தினம் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு மக்களுக்கு பிரச்சனையின்றி மின்சப்ளை என்பது வழங்கப்படும்.

அந்த வகையில் சென்னையில் நாளை (மே 23) சில இடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மின்சாரம் தடைப்படும் இடங்களின் விபரம் வருமாறு:
சென்னையில் நாளை (மே 23)ம் தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக சோழவரம், ஆவடி மற்றும் மயிலாப்பூரில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது. மதியம் 2 மணிக்கு பிறகு மின்சப்ளை மீண்டும் சீராக வழங்கப்படும்.
ஏரியா வாரியாக பார்த்தால் சோழவரத்தை எடுத்து கொண்டால் சோத்துபெரும்பேட்டின் ஒருபகுதி, காரனோடை, ஒரக்காடு ரோடு, கோட்டைமேடு பெரிய காலனி, செம்புலிவரம் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. அதேபோல் மியலாப்பூரை எடுத்து கொண்டால் சாந்தோம் ஹைரோடு, டோமிங் குப்பம், டோமிங் லைன், முல்லையம்மா நகர், சீனிவாசபுரம், கிழக்கு சர்க்கிள் ரோடு, மதாக்ஸ் சர்ச் ரோடு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
அதேபோல் லாசர் சர்ச், ரோசரி சர்ச் ரோடு, முத்து தெரு, அப்பு தெரு, சையத் வாஹன் உசேன் தெரு, எம்எம்கே தெரு, கச்சேரி ரோடு, நொச்சிக்குப்பம், பாபநாசம் சாலை, பஜார் ரோடு கன்னிலா தெரு, தேவதி தெரு, நடுதெரு,சாலை தெரு, சித்ரகுளம் வடக்கு, தச்சு அருணாச்சலம் தெரு, ஆபிரகாம் தெரு, விசி கார்டன், ஆர்கே முத்து ரோடு, சோலையப்பம்ன் தெரு, மந்தவெளி 5வது கிராஸ் ரேடு, வடக்கு மற்றும் கிழக்கு மாதா தெரு, நல்லப்பன் தெரு, ஆதம் தெரு, குமரகுரு தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
ஆவடி ஏரியாவை எடுத்து கொண்டால் மைதானமல்லி பாடசாலை தெரு, அம்பேத்கர் தெரு, எம்சி ராஜா தெரு, வள்ளூவர் தெரு, ராஜீவ் காந்தி நகர் 1வது முதல் 8 வது தெரு, பிருந்தாவன்நகர் 1வது முதல் 5வது தெரு, ஐஜிபி, சிஆர்பிஎப், காரிசன் இன்ஜினியரிங் ஐஏஎஃப் உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சப்ளை என்பது இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தாலும் சிக்கல் வராது.. ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காதீங்க! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின்












Click it and Unblock the Notifications