கனமழை பாதிப்பு.. கொளத்தூர் தொகுதிக்கு திடீர் விசிட்.. கொசுவலை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: சென்னை மாநகராட்சியின் சார்பில் நீர்நிலைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொசுவலை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதலே தொடர் மழை பெய்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் இன்று அதிகாலை முதல் விடாமல் மழை பெய்ய தொடங்கியது. இதனால் காலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் புரசைவாக்கம், ஓட்டேரி, வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் ஏராளமான பொதுமக்கள் சிரமங்களை சந்தித்தனர்.

மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார். குறிப்பாக ஓட்டேரி பகுதியில் உள்ள நல்லா பாலம் பகுதியில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார். அப்போது மழைநீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை அகற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டார்.

கொசுவலை வழங்கும் திட்டம்
இதன்பின்னர் மழைநீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற மாநகராட்சி சார்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். சென்னை மாநகராட்சியின் சார்பில் நீர்நிலைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொசுவலை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை மாநகராட்சி சார்பில் 2.5 லட்சம் கொசுவலைகள் மக்களுக்கு வழங்கப்பட உள்ளன. அதில் முதல் கட்டமாக 20 ஆயிரம் பேருக்கு கொசுவலை வழங்கப்பட உள்ளன. தொடர்ந்து மழைநீர் வடிகால் பணிகளையும் பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை அளித்தார். அதேபோல் மழைநீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற விரைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

படிப்படியாக மழை குறையும்
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டீபன்சன் சாலை, 70 அடி சாலை, பல்லவன் நகர், வீனஸ் நகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர்கள் கேஎன் நேரு, சேகர்பாபு, அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே அடுத்த 2 நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வரும் 16ம் தேதிக்கு பின்னர் கனமழை படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications