அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி.. சட்டசபையிலேயே நன்றி சொன்ன மு.க.ஸ்டாலின்.. காரணமே வேற!
சென்னை: சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து இருமொழிக் கொள்கை விவகாரம் தொடர்பாக வலியுறுத்தியதற்கு நன்றி சொன்ன மு.க.ஸ்டாலின், அடுத்த முறை டெல்லி செல்லும் போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தொடர்பாகவும் வலியுறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மத்திய பாஜக அரசு சிஏஏ மூலமாக சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களை வஞ்சித்தது. இந்தியை திணித்து இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது.

பாஜக எதிர்ப்பு
பாஜக ஆளாத மாநிலங்களை நிதி நெருக்கடி மூலம் வஞ்சிக்கிறது. அந்த வகையில் தற்போது வக்பு வாரிய சட்டத் திருத்தம் மூலமாக இஸ்லாமியர்களை வஞ்சிக்கிறது என்று தெரிவித்தார். தமிழ்நாடு அரசு கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு பாஜகவை தவிர்த்து மற்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மு.க.ஸ்டாலின் பேச்சு
இதுகுறித்து அதிமுக தரப்பில், வக்பு வாரிய அடிப்படையை தகர்க்கும் சட்டத்திருத்தம் என்று கருத்து கூறி ஆதரவு தெரிவித்தது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜகவை தவிர்த்து ஆதரவு தெரித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இருமொழிக் கொள்கை தொடர்பாக அவையில் நடந்த விவாதத்தின் போது ஒன்றை சொன்னேன்.
3 கார்களில் சென்ற இபிஎஸ்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருக்கிறார். எனக்கு யாரை சந்திக்க போகிறார் என்ற செய்தி கிடைத்திருக்கிறது என்று சொன்னேன். அதன்பின் டெல்லியில் கேட்ட போது, யாரையும் சந்திக்க வரவில்லை. எங்கள் கட்சி அலுவலகத்தை பார்க்க வந்திருப்பதாக கூறினார். ஆனால் மாலையில் 3 கார்களில் மாறி சென்று, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருக்கிறார்.
நன்றி சொன்ன முதல்வர்
அதற்காக நான் சந்திக்க வேண்டும், தவிருங்கள் என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் அங்கே சென்று, தமிழ்நாட்டின் உரிமைகளை கேட்டிருக்கிறேன். இருமொழிக் கொள்கை குறித்து பேசி இருக்கிறேன் என்று தெரிவித்தார். அதற்காக உள்ளபடியே அவையின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
வேண்டுகோள் வைத்த ஸ்டாலின்
அதேபோல் எப்படி இருமொழிக் கொள்கை தொடர்பாக பேசி இருக்கிறேன் என்று சொன்னாரோ, அதேபோல் அடுத்த முறை டெல்லி செல்லும் போது வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்தும் பேச வேண்டும் என்று வேண்டுகோள் வைப்பதாக தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் அமித் ஷாவை 45 நிமிடங்கள் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு சார்பாக கல்வி நிதி, மீனவர்கள் பிரச்சனைகள் என்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்ததாக தெரிவித்தார்.
-
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? 26 தொகுதிகளுக்கு வெளியான உத்தேச பட்டியல்! குஷ்பு, அண்ணாமலை மிஸ்ஸிங்! -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்!












Click it and Unblock the Notifications